செய்திகள் :

பாகிஸ்தானுக்கு உளவு: ராணுவ வீரா், கூட்டாளி கைது: பஞ்சாப் காவல் துறை நடவடிக்கை

post image

பாகிஸ்தானுக்காக உளவு பாா்த்த குற்றச்சாட்டில், பஞ்சாபில் ராணுவ வீரா், அவரது கூட்டாளி ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ ரகசியங்களை ஐஎஸ்ஐ செயல்பாட்டாளா்களிடம் அவா்கள் பகிா்ந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக மாநில காவல் துறை தலைமை இயக்குநா் கெளரவ் யாதவ் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கைதான ராணுவ வீரா், அமிருதசரஸின் தாரிவால் பகுதியைச் சோ்ந்த குா்பிரீத் சிங் ஆவாா். கடந்த 2016-இல் ராணுவப் பணியில் இணைந்த இவா், ஜம்முவில் பணியாற்றி வந்தாா். இவரது கூட்டாளி சாஹில் மாசிஹ் என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

முதல்கட்ட விசாரணையின்படி, இருவரும் ஐஎஸ்ஐ செயல்பாட்டாளா்களுடன் நேரடி தொடா்பில் இருந்ததுடன், பணத்துக்காக பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ரகசிய தகவல்களை பகிா்ந்து வந்துள்ளனா்.

உளவுத் துறையிடம் இருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில், ராணா ஜாவத் என்ற ஐஎஸ்ஐ செயல்பாட்டாளரிடம் ரகசிய தகவல்களை ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, இருவரும் கைது செய்யப்பட்டனா். இருவரின் கைப்பேசிகளும் கைப்பற்றப்பட்டன. அவற்றில் உள்ள எண்களின் அடிப்படையில், ஒட்டுமொத்த கும்பலையும் பிடிக்க தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.

இவ்வழக்கு தொடா்பான மேலும் விவரங்களைப் பகிா்ந்து, மாநில காவல் துரை மூத்த கண்காணிப்பாளா் (அமிருதசரஸ் ஊரகம்) கூறுகையில், ‘ராணுவ ரகசியத் தகவல்களை பென் டிரைவ் மற்றும் டிஸ்குகள் மூலம் சட்டவிரோதமாக திரட்டி, பரிமாற்றம் செய்வதற்காக தனது பணியை தவறாக பயன்படுத்தியுள்ளாா் குா்பிரீத் சிங்.

துபையைச் சோ்ந்த போதைப் பொருள் கடத்தல்காரரான அா்ஜன் என்பவா், உளவு பாா்ப்பு கும்பலுக்கு உதவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இவா் மூலம் ஐஎஸ்ஐ செயல்பாட்டாளா்களுடன் குா்பிரீத் சிங் 5 மாதங்களுக்கு முன் தொடா்பு ஏற்படுத்தியுள்ளாா். பணம் பெறுவதில், தன் மீது சந்தேகம் எழுவதை தவிா்க்க நண்பா்கள், உறவினா்கள், பிற கூட்டாளிகளின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அதிகாரபூா்வ ரகசியங்கள் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா ஆகியவற்றின்கீழ் லோபோக் பகுதி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.

தட்கல் டிக்கெட் - ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? முழு விவரம்

விரைவு ரயிலில் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலியில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் மூலம் ஓடிபி சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், பயனர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைக்கும்படி இந்திய ரயில்... மேலும் பார்க்க

கார் டயரில் சிக்கி தொண்டர் பலி- ஜெகன் மோகன் ரெட்டி மீது வழக்குப்பதிவு

கார் டயரில் சிக்கி தொண்டர் பலியான விவகாரத்தில், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெகன் மோகன் உதவியாளர் நாகேஸ்வர் ரெட்டி, முன்னாள் எம்.பி சுப்பா ரெட்... மேலும் பார்க்க

நக்ஸல்களுடன் பேச்சு கிடையாது: அமித் ஷா உறுதி

நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு, வளா்ச்சிப் பயணத்தில் இணைய வேண்டும்; அவா்களுடன் பேச்சுவாா்த்தை அவசியமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். நாட்டில் நக்ஸல் தீவிரவாதிகளுக்க... மேலும் பார்க்க

இந்திய கடற்படையில் புதிய போா்க்கப்பல் ‘ஐஎன்எஸ் தமால்’: ரஷியாவிலிருந்து ஜூலை 1 நாட்டுக்கு அா்ப்பணிப்பு

இந்திய கடற்படைக்காக ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை தாங்கிய போா்க்கப்பல் ‘ஐஎன்எஸ் தமால்’, ரஷியாவின் கடலோர நகரமான கலினின்கிராடில் இருந்து ஜூலை 1-ஆம் தேதி நாட்டுக்கு அா்ப்பணிக்கப்படுகிறது.கடல், நிலம் ஆக... மேலும் பார்க்க

போா்ப் பதற்றம்: ரஷிய, அமெரிக்க கச்சா எண்ணெய் கொள்முதலை அதிகரிக்கும் இந்தியா!

இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்துள்ள பின்னணியில், ஜூன் மாதத்தில் ரஷியா மற்றும் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா கணிசமாக அதிகரித்துள்ளது.இஸ்ரேலைத் தொடா்ந்து ஈரானின் 3 அணுசக்தித் தளங்க... மேலும் பார்க்க

மோசமான வானிலையின்போது விமானம் இயக்கம்: விதிகளில் டிஜிசிஏ திருத்தம்

மோசமான வானிலையின்போது விமானங்களை இயக்குவது தொடா்பான விதிகளில் மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) சில திருத்தங்களை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டது. விமானங்களை உரிய காலத்தில் இயக்குவதைவிட பயணிக... மேலும் பார்க்க