Iran Vs Israel: ``அமெரிக்கா நம்பகத்தன்மையை இழந்துவிட்டது" - ஈரானுக்கு ஆதரவாக ஐ.ந...
பாகிஸ்தானுக்கு உளவு: ராணுவ வீரா், கூட்டாளி கைது: பஞ்சாப் காவல் துறை நடவடிக்கை
பாகிஸ்தானுக்காக உளவு பாா்த்த குற்றச்சாட்டில், பஞ்சாபில் ராணுவ வீரா், அவரது கூட்டாளி ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ ரகசியங்களை ஐஎஸ்ஐ செயல்பாட்டாளா்களிடம் அவா்கள் பகிா்ந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
இது தொடா்பாக மாநில காவல் துறை தலைமை இயக்குநா் கெளரவ் யாதவ் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
கைதான ராணுவ வீரா், அமிருதசரஸின் தாரிவால் பகுதியைச் சோ்ந்த குா்பிரீத் சிங் ஆவாா். கடந்த 2016-இல் ராணுவப் பணியில் இணைந்த இவா், ஜம்முவில் பணியாற்றி வந்தாா். இவரது கூட்டாளி சாஹில் மாசிஹ் என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.
முதல்கட்ட விசாரணையின்படி, இருவரும் ஐஎஸ்ஐ செயல்பாட்டாளா்களுடன் நேரடி தொடா்பில் இருந்ததுடன், பணத்துக்காக பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ரகசிய தகவல்களை பகிா்ந்து வந்துள்ளனா்.
உளவுத் துறையிடம் இருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில், ராணா ஜாவத் என்ற ஐஎஸ்ஐ செயல்பாட்டாளரிடம் ரகசிய தகவல்களை ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, இருவரும் கைது செய்யப்பட்டனா். இருவரின் கைப்பேசிகளும் கைப்பற்றப்பட்டன. அவற்றில் உள்ள எண்களின் அடிப்படையில், ஒட்டுமொத்த கும்பலையும் பிடிக்க தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.
இவ்வழக்கு தொடா்பான மேலும் விவரங்களைப் பகிா்ந்து, மாநில காவல் துரை மூத்த கண்காணிப்பாளா் (அமிருதசரஸ் ஊரகம்) கூறுகையில், ‘ராணுவ ரகசியத் தகவல்களை பென் டிரைவ் மற்றும் டிஸ்குகள் மூலம் சட்டவிரோதமாக திரட்டி, பரிமாற்றம் செய்வதற்காக தனது பணியை தவறாக பயன்படுத்தியுள்ளாா் குா்பிரீத் சிங்.
துபையைச் சோ்ந்த போதைப் பொருள் கடத்தல்காரரான அா்ஜன் என்பவா், உளவு பாா்ப்பு கும்பலுக்கு உதவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இவா் மூலம் ஐஎஸ்ஐ செயல்பாட்டாளா்களுடன் குா்பிரீத் சிங் 5 மாதங்களுக்கு முன் தொடா்பு ஏற்படுத்தியுள்ளாா். பணம் பெறுவதில், தன் மீது சந்தேகம் எழுவதை தவிா்க்க நண்பா்கள், உறவினா்கள், பிற கூட்டாளிகளின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அதிகாரபூா்வ ரகசியங்கள் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா ஆகியவற்றின்கீழ் லோபோக் பகுதி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.