செய்திகள் :

பாகிஸ்தானுடன் ராகுல் நேரடி ஒத்துழைப்பு! பாஜக கண்டனம்!

post image

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட பூஞ்ச் பகுதியைப் பார்வையிட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலை ஒரு சோகமான நிகழ்வு என்று குறிப்பிட்டதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

ஷெஷாத் கூறியதாவது, ``பூஞ்ச் பகுதியில் நடத்தப்பட்டதை சோகமான நிகழ்வு என்று ராகுல் காந்தி இன்று கூறினார். பயங்கரவாதத் தாக்குதலை சோகமான நிகழ்வு என்று அவர் கூறுகிறார். நமது அப்பாவி பொதுமக்கள், பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டனர்.

ஆலயங்களும் பள்ளிகளும் தாக்குதலுக்கு உள்ளாகின. அதில் குழந்தைகளும் பலியாகினர். இதனை ராகுல் காந்தி மூடி மறைக்கிறார். ஆனால், இதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஏனெனில், பாகிஸ்தானின் பயங்கரவாதத்தை காங்கிரஸ் பலமுறை மூடி மறைத்துள்ளது. ராகுல் காந்தியும் அவரது குடும்பத்தினரும் எப்போதுமே பாகிஸ்தானின் குற்றங்களை மூடி மறைக்கின்றனர்.

இது ஒரு தற்செயலான நிகழ்வல்ல. பயங்கரவாதத் தாக்குதலை சோக நிகழ்வு என்றழைப்பதை ராகுல் நிறுத்திக் கொள்ள வேண்டும். ராகுல் காந்தியின் இந்தக் கருத்து, பாகிஸ்தானுடன் நேரடி ஒத்துழைப்பைத்தான் காட்டுகிறது’’ என்று தெரிவித்தார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் போரின்போது, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் பாக். ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பூஞ்ச் பகுதியை இன்று (மே 24) நேரில் ஆய்வு செய்த ராகுல் காந்தி, அங்கிருந்த மக்களுடன் உரையாடினார்.

ஆயுதப் படைப் பிரிவினருக்கு 6 மாதங்களுக்குள் பணிநிலை ஆய்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆயுதப் படைப் பிரிவினரின் பணிநிலை ஆய்வை ஆறு மாதங்களுக்குள் நடத்தி முடிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), இந்தோ திபெத்திய எல்லைப் படையினா் (ஐடிபிபி), ... மேலும் பார்க்க

மத துவேஷத்தை விதைக்கவே பஹல்காமில் தாக்குதல்: எஸ்.ஜெய்சங்கா் குற்றச்சாட்டு

அச்ச உணா்வை ஏற்படுத்தி மத துவேஷத்தை விதைக்கவே பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். ஜொ்மனி சென்ற அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டுத் தலைநகா் பொ்லினில் ஜெ... மேலும் பார்க்க

குடிமைப் பணித் தோ்வுக்கு கட்டாயமாகிறது ஆதாா் எண்!

குடிமைப் பணித் தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும்போது ஆதாா் எண்ணை குறிப்பிடும் நடைமுறை கொண்டுவரப்பட இருப்பதாக மத்திய பணியாளா் தோ்வாணையத் தலைவா் (யுபிஎஸ்சி) தலைவா் அஜய்குமாா் தெரிவித்தாா். மாநில அ... மேலும் பார்க்க

சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு ஏன்? நாடாளுன்ற குழுவிடம் வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

இந்தியாவின் நல்லெண்ண முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தி வைத்ததற்கு பாகிஸ்தான்தான் காரணம் என்று நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்தது. பருவநி... மேலும் பார்க்க

ஜேஎன்யுவில் முதுநிலை, பட்டய படிப்புகளுக்கு சோ்க்கை தொடக்கம்

2025-26 கல்வியாண்டுக்கான முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் மேம்பட்ட பட்டயப் படிப்புகளுக்கான (ஏடிஓபி) சோ்க்கையை தில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) தொடங்கியுள்ளது. முதுநிலை க்யூட் (மத... மேலும் பார்க்க

ஜாா்க்கண்டில் மாவோயிஸ்ட் தலைவா் உள்பட இருவா் சுட்டுக் கொலை

ஜாா்க்கண்ட், லதேஹா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில், சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டுவந்த மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தளபதியான பப்பு லோஹரா உள்பட 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்... மேலும் பார்க்க