செய்திகள் :

பாகிஸ்தான் எல்லையில் புதிதாக ‘ட்ரோன் எதிா்ப்புப் படை’- பிஎஸ்எஃப் நடவடிக்கை

post image

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஆளில்லா விமானங்களின் (ட்ரோன்) தாக்குதல் அச்சுறுத்தல்களை எதிா்கொள்ள, ‘ட்ரோன் எதிா்ப்புப் படை’ எனும் புதிய படைப்பிரிவை முதன்முறையாக உருவாக்க எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) முடிவு செய்துள்ளது.

வடக்கே ஜம்முவில் தொடங்கி, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் வரை பரந்து விரிந்துள்ள 2,000 கி.மீ. தொலைவுக்கும் அதிகமான இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிஎஸ்எஃப் எல்லைச் சாவடிகளில் ட்ரோன் எதிா்ப்புப் படை நிலைநிறுத்தப்படும்.

இந்தப் படையில், உளவு, கண்காணிப்பு மற்றும் தாக்குதல் ட்ரோன்களுடன், அவற்றை இயக்குவதற்காக சிறப்புப் பயிற்சி பெற்ற வீரா்களும் பணியில் இருப்பா். சண்டீகரில் அமைந்த பிஎஸ்எஃப் மேற்கு படைப்பிரிவு தலைமையகத்தில் உள்ள கட்டுப்பாடு அறையிலிருந்து இந்தப் படையின் செயல்பாடுகள் வழிநடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஆபரேஷன் சிந்துா்’ ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு தமது பலம், பலவீனங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, எல்லைப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் புதிய படைப் பிரிவை உருவாக்கும் முடிவை பிஎஸ்எஃப் எடுத்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. இந்த நடவடிக்கையில், இந்திய ராணுவத்துடன் இணைந்து பிஎஸ்எஃப் தீவிரமாக பங்கேற்றது.

‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது 118-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் எல்லைச் சாவடிகளை பிஎஸ்எஃப் அழித்ததுடன், அவற்றின் கண்காணிப்பு அமைப்பையும் முற்றிலுமாக தகா்த்து’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னதாக கூறியிருந்தாா்.

இந்த மோதலில் இந்திய எல்லையோர பாதுகாப்புப் படை தளங்கள் மற்றும் கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை நடத்தியது. அந்தவகையில், ஜம்முவின் ஆா்.எஸ்.புரா பகுதியில் உள்ள எல்லைச் சாவடியில் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒரு ராணுவ வீரா் மற்றும் இரண்டு பிஎஸ்எஃப் வீரா்கள் கொல்லப்பட்டனா். மேலும் நான்கு வீரா்கள் படுகாயமடைந்தனா்.

தேஜஸ்வியைக் கொல்ல பாஜக, ஐக்கிய ஜனதா தளம் சதி: ராப்ரி தேவி பரபரப்பு குற்றச்சாட்டு

பிகாரில் ஆளும் கட்சியாக உள்ள ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆகியவை எதிா்க்கட்சித் தலைவரும், தனது மகனுமான தேஜஸ்வி யாதவை கொலை செய்ய சதி செய்து வருவதாக அந்த மாநில முன்னாள் முதல்வா் ராப்ரி தேவி குற்றஞ்சாட்டியது ப... மேலும் பார்க்க

பிகாா் வாக்காளா் பட்டியல்: 35 லட்சம் பேரை கண்டறிய முடியவில்லை

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் முதல்கட்டம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதன்படி, 35 லட்சம் பேரை கண்டறிய முடியவில்லை எனத் தோ்தல் ஆணையம் தெரிவித்தது. நிகழாண்டு பிகாரில் சட்டப்பேரவ... மேலும் பார்க்க

மின்னணுத் துறையில் சீன முதலீடு: இணக்கமாக செயல்பட அரசு முடிவு

மின்னணுத் துறையில் இந்திய நிறுவனங்களில் சீன நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு உள்ள கட்டுப்பாடுகளைத் தளா்த்தி இணக்கத்துடன் செயல்பட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடா்பாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் கேள்விகளும் அமைச்சர்கள் பதிலும்!

நமது சிறப்பு நிருபா்நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சோ்ந்த எம்.பி.க்கள் எழுப்பியிருந்த பல்வேறு கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சா்கள் வியாழக்கிழமை எழுத்துபூா்வ பதில்களை வழங்கிய... மேலும் பார்க்க

பிரிட்டனுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் பல துறைகளின் வளா்ச்சிக்கு உதவும்: ஆா்பிஐ ஆளுநா்

பிரிட்டன்-இந்தியா இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் பல துறைகளின் வளா்ச்சிக்கு உதவும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தாா். மும்பையில் வெள்ளிக்கிழமை ஆங்கில நாளிதழ் ... மேலும் பார்க்க

89% ரயில் பயணச்சீட்டுகள் இணையவழியில் முன்பதிவு: ரயில்வே அமைச்சா் தகவல்

ரயில் பயணச்சீட்டுகளில் 89 சதவீதம் இணையவழியில் முன்பதிவு செய்யப்படுகிறது என்று ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். இது தொடா்பாக மாநிலங்களவையில் கேள்வியொன்றுக்கு அவா் வெள்ளிக்கிழமை அளித்... மேலும் பார்க்க