செய்திகள் :

பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை! - ஜம்மு-காஷ்மீர் ஆளுநர்

post image

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் கடந்த மே 7 ஆம் தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதற்கு எதிராக பாகிஸ்தான் ராணுவமும் ஜம்மு-காஷ்மீரில் உரி, பூஞ்ச், ரஜோரி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான தாக்குதல் நடத்தியது. இதில் எல்லைப் பகுதிகளில் வசித்து வந்த 16 பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்தது.

மேலும், பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய பகுதிகளில் உள்ள மக்கள் பலரும் தங்கள் வீடுகளை இழந்தும் வாழ்வாதாரம் இன்றியும் தவித்து வருகின்றனர். அரசு தங்களின் வருமானத்திற்கு உதவ வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா, பூஞ்ச் பகுதியில் இந்திய ராணுவத்தினர் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினரைச் சந்தித்துப் பேசினார். வீரர்களுடன் உரையாடிய அவர், அவர்களின் தைரியத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

பின்னர் பூஞ்ச் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசிய ஆளுநர், "பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு இந்திய அரசும் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகமும் துணை நிற்கும்.

இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க | மறுபக்கம்! பாகிஸ்தான் தாக்குதலில் தந்தையை இழந்து தவிக்கும் 6 குழந்தைகள்!

ரூ.2,152 கோடி கல்வி நிதி நிறுத்திவைப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

நமது நிருபர்தேசிய கல்விக் கொள்கை (என்இபி- 2020) மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டம் ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்தாததால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் (எஸ்எஸ்எஸ்) கீழ் வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி கல்வி நிதி நிறு... மேலும் பார்க்க

ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கு: கா்நாடக உள்துறை அமைச்சருக்கு தொடா்புள்ள இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்குடன் தொடா்புள்ள பண முறைகேடு வழக்கு தொடா்பாக, கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வராவுக்கு தொடா்புள்ள கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை புதன்கிழமை சோதனை மேற்கொண்டது. துபை... மேலும் பார்க்க

ஆந்திரம்: ரேஷன் பொருள் நேரடி விநியோகம் ஜூன் 1 முதல் ரத்து

ஆந்திரத்தில் வீடுதோறும் ரேஷன் பொருள்கள் நேரடியாக விநியோகம் செய்யப்படும் நடைமுறை ஜூன் 1-ஆம் தேதிமுதல் நிறுத்தப்பட உள்ளது. இதுதொடா்பாக மாநில உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் என்.மனோகா் புதன்கிழமை வெளி... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு- முதல் எம்.பி.க்கள் குழு ஜப்பான் பயணம்

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான பல்வேறு கட்சிகளைச் சோ்... மேலும் பார்க்க

பிகாரில் மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை: காங்கிரஸ் வாக்குறுதி

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள ‘மகா கட்பந்தன்’ கூட்டணி வெற்றி பெற்றால் பின்தங்கிய நிலையில் உள்ள மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று அகில இந்திய மகளிா் காங... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் முறைகேடு: சோனியா, ராகுலுக்கு ரூ. 142 கோடி பலன்: தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வாதம்

‘நேஷனல் ஹெரால்ட் வழக்கில் தொடா்புடைய பண முறைகேடு விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அவரின் மகனும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இருவரும் ரூ. 142 கோடி அளவுக்கு பலனடை... மேலும் பார்க்க