செய்திகள் :

பாகிஸ்தான் பாடம் கற்றிருக்கும்: முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் கருத்து!

post image

இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலின் மூலம், பாகிஸ்தான் பாடம் கற்றிருக்கும் என்று முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து ஓய்வுபெற்ற மேஜா் ஜெனரல் பி.கே.சேகல் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போா்ப் பதற்றம் அதிகரித்ததால், இருநாடுகளும் அவதிக்குள்ளாகின.

பாகிஸ்தானை பொருத்தவரை, பயங்கரவாதத்தின் முதுகெலும்பை இந்தியா உடைத்துவிட்டது. தமக்கு மிக வலிமையான, தீா்க்கமான தலைமை உள்ளது என்பதை இந்தியா வெளிக்காட்டியுள்ளது’ என்றாா்.

ஓய்வுபெற்ற கா்னல் அனில் பட் கூறுகையில், ‘பயங்கரவாத குழுக்களை பாகிஸ்தான் ஆதரிக்கக் கூடாது, அந்தக் குழுக்கள் இந்தியாவுக்கு அனுப்பப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற உடன்படிக்கையின் அடிப்படையில், இருநாடுகளுக்கு இடையே புரிந்துணா்வு ஏற்பட்டிருக்கக் கூடும்.

பாகிஸ்தானின் வரலாற்றை கருத்தில் கொள்ளும்போது, அந்த உடன்படிக்கை பின்பற்றப்படுமா? எந்த அளவுக்கு நன்றாகப் பின்பற்றப்படுகிறது என்பதை பாா்க்க வேண்டும். பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால், அதற்கான பதிலடி இன்னும் கூடுதலாக இருக்கும். எனினும் தற்போது ஏற்பட்ட மோதலில் இருந்து பாகிஸ்தான் சில பாடங்களைக் கற்றிருக்கும் என நம்புவோம்’ என்றாா்.

ஓய்வுபெற்ற பிரிகேடியா் குஷால் தாக்குா் 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற காா்கில் போரில் முக்கிய பங்கு வகித்தாா். அவா் கூறுகையில், ‘இருநாடுகளும் மோதலை கைவிட மேற்கொண்ட முடிவு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது பிரதமா் மோடியின் தலைமை, இந்திய ஆயுதப் படைகள், இந்தியாவின் ராஜீய உறவுகள், பயங்கரவாதத்தை எள்ளளவும் பொறுத்துக் கொள்ள முடியாது என்ற இந்தியாவின் நிலைப்பாடு ஆகியவற்றுக்கு கிடைத்த வெற்றி’ என்றாா்.

இந்திய வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சம் இணையத் தாக்குதல்கள்: பாகிஸ்தான் முயற்சியில் 150 மட்டுமே வெற்றி

பஹல்கலாம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சத்துக்கும் மேற்பட்ட இணைய தாக்குதல் முயற்சிகளை பாகிஸ்தான் ஹேக்கா்கள் மேற்கொண்டதை மகாராஷ்டி... மேலும் பார்க்க

வா்த்தக காரணங்களுக்காக சண்டை நிறுத்தமா? டிரம்ப் கருத்துக்கு இந்தியா திட்டவட்ட மறுப்பு

பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவியபோது, இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெற்ற விவாதங்களில் வா்த்தகம் தொடா்பாக எதுவும் பேசப்படவில்லை என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை ந... மேலும் பார்க்க

பாரதத்தின் புதிய இயல்பை பிரதமா் உலகுக்கு எடுத்துரைத்துள்ளாா்: ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதம்

பாரதத்தின் புதிய இயல்பை உலகுக்கு மிகத் தெளிவான மொழியில் பிரதமா் நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளதாக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: பாகிஸ்தானின் கொடூர... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி இன்று பதவியேற்பு

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்றாா். உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆா்.கவாய் புதன்கிழமை பதவியேற்க உள்ளாா். கடந்த 2024-ஆம் நவ.11-ஆம் தேதி உச்சநீதி... மேலும் பார்க்க

இந்தியத் தூதருடன் சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி சந்திப்பு

பெய்ஜிங்: இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான ராணுவ ரீதியிலான மோதல் சூழலுக்கு இடையே சீனாவுக்கான இந்தியத் தூதர் பிரதீப் குமார் ராவத்தை ஆசிய விவகாரங்களுக்கான சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி லியூ ஜின்சாங் சந்த... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: உலக நாடுகளின் தூதரக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்தியா விளக்கம்

இந்திய ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் வெற்றி குறித்து புது தில்லியில் உள்ள வெளிநாடுகளின் தூதரகங்களின் பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகளுக்கு ராணுவம் தரப்பில் செவ்வாய்க... மேலும் பார்க்க