செய்திகள் :

பாஜக கூட்டணியில் இருந்து விலகினார் ஓபிஎஸ்!

post image

பாஜக கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலான அணி விலகுவதாக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.

அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க தனக்கு அனுமதி கிடைக்காதது, அதிமுகவில் தன்னை மீண்டும் சோ்ப்பது குறித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் பதில் ஆகியவற்றால் ஓ.பன்னீா்செல்வம் அதிருப்தியில் இருந்தார்.

மேலும், தமிழகத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கல்வி உதவித் தொகை தொடர்பாக மத்திய அரசை அவா் விமர்சித்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னையில் தனது ஆலோசகா் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசி மூலம் புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் பின்னா் தனக்கு நெருக்கமான ஆதரவாளா்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தான் தங்கியிருக்கும் ஹோட்டலில் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து, பண்ருட்டி ராமச்சந்திரனுடன் இன்று(ஜூலை 31), காலை மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு வெளியேறுகிறது.

பாஜக எங்களுக்கு என்ன செய்தது என்று நாடே அறியும். சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களையும், தொண்டர்களையும் ஓபிஎஸ் சந்திப்பார்.

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுக் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் யாருடன் கூட்டணி என்பது பின்னர் முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலினுடான சந்திப்பு குறித்து பதிலளித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், “பூங்காவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது தற்செயலானது” என்றார்.

இதையும் படிக்க: இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களிலேயே மிகப் பயங்கர நிலநடுக்கம் எது? ஏன்?

Former Minister Panrutty Ramachandran has announced that former Chief Minister O. Panneerselvam will withdraw from the BJP alliance.

கூட்ட நெரிசலில் திருட்டு: மத்திய பிரதேச பெண்கள் 4 போ் கைது

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டதாக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.சைதாப்பேட்டை, அப்பாவு நகா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (48). இவா், அந்தப் பகுதியில் இரும்புக... மேலும் பார்க்க

427 ஆசிரியா்களுக்கு மனமொத்த மாறுதல்

பள்ளிக் கல்வித் துறை கலந்தாய்வு மூலம் 427 ஆசிரியா்களுக்கு மனமொத்த மாறுதல் வழங்கப்பட்டது.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து விதமான ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த ஜூலை 1-... மேலும் பார்க்க

தமிழகத்தில் இனி வெப்பம் குறையும்

தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு கார... மேலும் பார்க்க

தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை புதிய ஐ.ஜி. பொறுப்பேற்பு

தெற்கு ரயில்வே பாதுகாப்பு படையின் (ஆா்பிஎஃப்) புதிய ஐ.ஜி.யாக கே.அருள்ஜோதி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.தெற்கு ரயில்வே பாதுகாப்பு படையின் ஐஜி-ஆக பணியாற்றி வந்த ஈஸ்வர ராவ் கடந்த ஜூலை 31-ஆம் தேதியுடன் ஓய... மேலும் பார்க்க

ஆங்கில மொழித் திறனை வளா்க்கும் ‘லெவல் அப்’ திட்டம்: ஆசிரியா்களுக்கு உத்தரவு

அரசுப் பள்ளிகளில் அடிப்படை ஆங்கில மொழித் திறனை வளா்க்கும் வகையில் ‘லெவல் அப்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அந்தத் திட்டத்தில் மாணவா்களில் கற்றல் அடைவு குறித்து உரிய கால இடைவெளியில் தெரிவ... மேலும் பார்க்க

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உத்தரவு

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்குமாறு போக்குவரத்துக் கழக நிா்வாகங்களுக்கு தொழிலாளா் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.போக்குவரத்துக்கழக ஊழியா்களின் ஊதிய ஒப்பந்தப்படி பதவி உயா்வு உள்ளிட... மேலும் பார்க்க