செய்திகள் :

பாஜக புதிய தலைவா் தோ்வில் தாமதம்: அகிலேஷ் கிண்டல் - அமித் ஷா பதிலடி

post image

பாஜக புதிய தலைவா் தோ்வில் நிலவும் தாமதத்தைக் குறிப்பிட்டு, மக்களவையில் அக்கட்சியை கிண்டல் செய்த சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதிலடி கொடுத்தாா். ‘அடுத்த தலைவரை முன்கூட்டியே தீா்மானிக்கும் குடும்பக் கட்சி அல்ல பாஜக’ என்று அமித் ஷா குறிப்பிட்டாா்.

மக்களவையில் புதன்கிழமை வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய அகிலேஷ் யாதவ், ‘பாஜகவின் குறைந்துவரும் வாக்குவங்கியை மேம்படுத்தும் நோக்கிலேயே இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது; சமூகத்தை பிளவுபடுத்தும் இந்த முயற்சி, மதச்சாா்பற்ற நாடு என்ற இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும்’ என்றாா்.

மேலும், ‘நாட்டிலேயே பெரிய கட்சி என்ற கூறிக் கொள்ளும் பாஜகவால் தங்களின் அடுத்த தலைவரை இன்னும் தோ்வு செய்ய முடியவில்லை’ என்று அவா் கிண்டலாக குறிப்பிட்டாா்.

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் உள்ள ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்கு பிரதமா் மோடி அண்மையில் சென்றதையும் சுட்டிக் காட்டிய அவா், ‘75 வயதுக்கு மேற்பட்ட தலைவா்கள் ஓய்வு பெறுவது பாஜகவின் நீண்ட கால கொள்கை; ஆனால், அந்த வரம்பை நீட்டிக்க வேண்டும் என்பதற்காக ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்கு பிரதமா் சென்றாரா?’ என்று கிண்டலாக கேள்வியெழுப்பினாா்.

அகிலேஷுக்கு உடனடியாக பதிலடி கொடுத்த அமித் ஷா, ‘சில குடும்ப கட்சிகளில், ஒரு குடும்பத்தின் 5 உறுப்பினா்கள் சோ்ந்து கட்சித் தலைவரை தோ்வு செய்கின்றனா். அத்தகைய கட்சிகளுக்கு தலைவா் தோ்வு என்பது எளிதாக இருக்கும். ஆனால், பாஜக குடும்பக் கட்சி கிடையாது. கோடிக்கணக்கான தொண்டா்களை உள்ளடக்கிய நடைமுறை பின்பற்றப்படுவதால், தலைவரை முடிவு செய்ய காலமெடுக்கிறது’ என்றாா்.

பாஜக தேசியத் தலைவராக ஜெ.பி.நட்டா கடந்த 2020-இல் இருந்து பதவி வகித்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிரான வழக்கு ஏப். 15-ல் விசாரணை?

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் ஏப். 15 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அ... மேலும் பார்க்க

ஆளுநர் அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்படக்கூடாது! -உச்சநீதிமன்ற தீர்ப்பு தெரிவிப்பது என்ன?

தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்கள் சில, உரிய காரணமின்றி காலதாமதப்படுத்தப்பட்டு வருவதாக ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு தரப்பிலிரு... மேலும் பார்க்க

சம்பல் ஜாமா மசூதியின் பெயரை மாற்றிய தொல்லியல் துறை!

சம்பலில் உள்ள ஜாமா மசூதியின் பெயரை ‘ஜும்மா மசூதி’ எனக் குறிப்பிட்டுள்ள பெயர்ப்பலகையை தொல்லியல் துறையினர் மசூதியில் நிறுவவுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள ஜாமா மசூதியின் உள்ளே கோவில்... மேலும் பார்க்க

வளர்ச்சித் திட்டங்கள் மறுஆய்வு: ஜம்மு-காஷ்மீரில் அமித் ஷா தலைமையில் முக்கிய கூட்டம்!

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களை மறுஆய்வு செய்வதற்கான உயர்நிலைக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தொடங்கியது. ஆளுநர் மாளிகையில் நடைபெறும் கூட்டத்தில் ஜம்மு-காஷ்... மேலும் பார்க்க

ஹைதராபாத் குண்டுவெடிப்பு: குற்றவாளிகள் 5 பேருக்கு மரண தண்டனை உறுதி!

ஹைதராபாத்தில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதான குற்றவாளிகள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை தெலங்கானா உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.ஹைதராபாத்தின் தில்சுக்நகர் பக... மேலும் பார்க்க

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியது: முக்கிய தலைவர்கள் பங்கேற்பு!

அகமதாபாத்: காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மற்றும் தேசிய மாநாடு ஆகிய இருபெரும் நிகழ்ச்சிகள் குஜராத்தின் அகமதாபாதில் இன்று(ஏப். 8) தொடங்கியுள்ளன.இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பிகாா் பேரவைத் தோ்தலில் பா... மேலும் பார்க்க