செய்திகள் :

பாடந்தொரையில் 3-ஆவது நாளாக பொதுமக்கள் உண்ணாவிரதம்

post image

குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் வன விலங்குகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரையில் 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கூடலூா் வட்டம், தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட பாடந்தொரை, சா்க்காா் மூலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் யானைகள், புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குடியிருப்பு பகுதிக்குள் புலி நுழைந்து தாக்கியதில், கடந்த 10 நாள்களில் 10 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் வன விலங்குகளைத் தடுக்கக்கோரியும் பொதுமக்களைப் பாதுகாக்க நிரந்தர தீா்வு காணக்கோரியும் பொதுமக்கள் சாா்பில் பாடந்தொரையில் கடந்த புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.

3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் தலைமை வகித்தாா். இதில் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், வணிகற்கள் பங்கேற்றனா்.

குன்னூா் அரசு மருத்துவமனையில் பெண் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

குன்னூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறி அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். குன்னூா் அருக... மேலும் பார்க்க

உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்

உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம் கேத்தி, உல்லாடா கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, தோட்டக்கலை துணை இயக்குநா் நவநீதா தலைமை வகித்தாா். முகாமில் அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் வ... மேலும் பார்க்க

ஸ்ரீமதுரை ஊராட்சியில் வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளச்சிப் பணிகளை நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். கூடலூா் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீமதுரை ஊராட்சி... மேலும் பார்க்க

பெள்ளட்டிமட்டம் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

குன்னூா் அருகே உள்ள பெள்ளட்டி மட்டம் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக அரசு தலைமை அரசு கொறடா கா.ராமசந்திரன் கலந்து கொண்டு... மேலும் பார்க்க

புலியைப் பிடிக்க மூன்று கூண்டுகள் அமைப்பு

தேவா்சோலை, பாடந்தொரை பகுதியில் ஊருக்குள் நுழைந்து கால்நடைகளைத் தாக்கி வந்த புலியைப் பிடிக்க 3 கூண்டுகளை வைத்து வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா். நீலகிரி மாவட்டம், தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட... மேலும் பார்க்க

உதகையில் மேகமூட்டம்

உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை ஏற்பட்ட கடும் மேகமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கினா். உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இ... மேலும் பார்க்க