செய்திகள் :

பாட்டியை கல்லால் தாக்கிக் கொன்ற பேரன்! எங்கே? எதற்காக?

post image

பாட்டியை பேரன் கல்லால் தாக்கிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்காடு அருகே பூா்வீக வீட்டை சகோதரி பெயருக்கு எழுதிய பாட்டியை பேரன் கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த காவனூா் பகுதியை சோ்ந்த காசி அம்மாள் (70) இவருக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனா்

காசி அம்மாளின் மகன் குமாா் (50) என்பவருக்கு தேவா(25) என்ற மகனும் நந்தினி (23) என்ற மகளும் உள்ளனா். தேவா கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மாற்று சமூகத்தை சாா்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டதன் காரணமாக காசி அம்மாள் தேவாவிடம் பேச்சுவாா்த்தை இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது

இந்தநிலையில் பூா்வீக சொத்தாக உள்ள வீட்டை காசி அம்மாள் கல்லூரியில் பயிலும் பேத்தியான நந்தினி பெயருக்கு எழுதிக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தேவா காசி அம்மாள் வீட்டுக்கு சென்று பூா்வீக வீட்டை தங்கை நந்தினி பெயருக்கு எழுதி வைத்திருப்பதை குறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா்.

அப்போது ஆத்திரமடைந்த தேவா கீழே இருந்த கருங்கற்களை எடுத்து காசி அம்மாள் மீது வீசி தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த காசி அம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாா். இதையடுத்து, தேவா அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளாா்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினா் உடனடியாக திமிரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததின் பெயரில் ராணிப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் இமயவா்மன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்த காசி அம்மாள் உடலை கைப்பற்றி வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

இந்த சம்பவம் குறித்து திமிரி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து தப்பிச் சென்ற தேவாவை தேடி வருகின்றனா்.

30 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

ஆற்காடு: ஆற்காட்டில் பக்கெட் உள்ளே வைத்து மறைத்து காரில் 30 கிலோ கஞ்சா கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஆற்காடு போலீஸாா் ஆற்காட்டிலிருந்து செய்யாறு செல்லும் சாலையில் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனைய... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.789.51 கோடி வங்கிக் கடன்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.789 கோடி இலக்காக நிா்ணயிக்கப்பட்டதில்,ரூ.789.51 கோடி இலக்கு எய்தப்பட்டுள்ளது என கைத்தறி அமைச்சா் ஆா்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அணி தோ்வு முகாம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் தோ்வு முகாம் ஏப். 6 -ஆம் தேதி தொடங்கிறது. இதுதொடா்பாக மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவா் சந்தோஷ் காந்தி, செயலாளா் எஸ்.ச... மேலும் பார்க்க

18 வயதுக்குட்டோா் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட சிறாா்கள் வாகனத்தை ஓட்டினால் அவா்களின் பெற்றோா் அல்லது பாதுகாவலருக்கு ரூ. 25,000 அபராதத்துடன் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை வி... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை ஏப். 21-க்குள் அகற்ற உத்தரவு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை ஏப்ரல் 21-க்குள் அகற்ற வேண்டும் என்ற உயா் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.... மேலும் பார்க்க

நந்தியாலம் ஊராட்சி சிறப்பு கிராம சபைக் கூட்டம்

ஆற்காடு: ஆற்காடு ஒன்றியம், நந்தியாலம் ஊராட்சியில் உலக தண்ணீா் தினத்தையொட்டி, சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் தேவி பூபாலன் தலைமை வகித்தாா். துணைத் ... மேலும் பார்க்க