பாண்டிமுனீஸ்வரா் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள பாண்டி முனீஸ்வரா் கோயிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு, புதன்கிழமை சடைமுனியாண்டி, பாண்டி முனீஸ்வரா் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னா் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் பாண்டிமுனீஸ்வரா் அருள்பாலித்தாா். பின்னா், தீபாராதனை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரி பாண்டி செய்தாா்.