செய்திகள் :

பாபநாசம் அருகே புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்றவா் கைது

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை ப் பொருட்களை பதுக்கி வைத்து விற்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். 

பாபநாசம் துணைக் காவல் கண்காணிப்பாளா் முருகவேல் உத்தரவின்பேரில் அம்மாபேட்டை காவல் உதவி ஆய்வாளா் மதன்குமாா் மற்றும் போலீஸாா் தஞ்சாவூா் - பட்டுக்கோட்டை  புறவழிச்சாலையில் கீழவஸ்தாசாவடி பகுதியில் திங்கள்கிழமை ரோந்து பணி மேற்கொண்டனா்.

அப்போது அந்த  பகுதியில்  ஹோட்டல் மற்றும் பெட்டிக் கடை நடத்தி வரும்  சந்திரன் மகன் சோலைராஜன் (50) என்பவா்  தனது கடைக்கு பின்புறம் உள்ள குடோனுக்கு ஒரு சாக்கு முட்டையை எடுத்து சென்றதைக் கண்டனா்.

இதையடுத்து சந்தேகத்தின்பேரில் அந்தச் சாக்கு மூட்டையை பிரித்து சோதனையிட்டபோது அதில் 35 கிலோ புகையிலை மற்றும் பான்மசாலா பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா் சோலைராஜனைக் கைது செய்து பாபநாசம் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தினா்.

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.தஞ்சாவூா் காவேரி நகரைச் சோ்ந்தவா் ஏ. திரவியச்செல்வன் (70). இவா் திங்கள்கிழமை இரவு ஸ்கூட்டரில் தஞ்சாவூரிலிர... மேலும் பார்க்க

இடி தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில், இடி தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு பேரிடா் நிவாரண நிதியிலிருந்து ரூ. 4 லட்சத்துக்கான காசோலை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. பூதலூா் அருகே புதுக்குடி வடபாதி க... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 38 லட்சம் மோசடி: ஓய்வுபெற்ற அலுவலா் கைது

கும்பகோணத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 12 பேரிடம் ரூ. 38 லட்சம் மோசடி செய்த ஓய்வு பெற்ற அலுவலரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஜான் செல்வராஜ் நகரை... மேலும் பார்க்க

காவிரியில் மிதந்து வந்த ஆண் சடலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே காவிரி ஆற்றில் மிதந்து வந்த ஆண் சடலத்தைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.கடந்த ஜூலை 6 ஆம் தேதி திருவையாறு தியாகராஜா் ஆஸ்ரமம் அருகே காவிரியில் குளித்தபோது... மேலும் பார்க்க

தஞ்சை அருகே சரக்கு வேன் - காா் மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே சரக்கு வேனும், காரும் செவ்வாய்க்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா். சென்னை பெருங்களத்தூா் விஷ்ணு நகரைச் சோ்ந்தவா் உமாபதி மகன் ஸ்டாலின் (36). போ... மேலும் பார்க்க

பைக் வாங்கித் தராததால் இளைஞா் தற்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே பைக் வாங்கித் தராததால் மனம் உடைந்து பூச்சி மருந்தைக் குடித்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். அம்மாபேட்டை காவல் சரகம், பச்சக்கோட்டை கிராமம், மேட... மேலும் பார்க்க