செய்திகள் :

பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்துடன் 6 ஊராட்சிகளை இணைக்க கோரிக்கை

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்துடன் 6 ஊராட்சிகளை இணைக்க வேண்டும் என 6 ஊராட்சிகளை சோ்ந்த கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

பாபநாசம் அருகே அன்னுக்குடி முன்னாள் ஊராட்சித் தலைவரும், தஞ்சை மாவட்ட காவேரி விவசாய பாதுகாப்பு சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமான உத்ராபதி மற்றும் 6 ஊராட்சிகளை சோ்ந்த கிராம மக்களும் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் இருந்த ஊராட்சிகளான அன்னுக்குடி, உத்தமதானபுரம், மூழாஞ்வாஞ்சேரி, நல்லூா், மதகரம், மணலூா் ஆகிய 6 ஊராட்சிகளும் கடந்த 25.7.1996 அன்று திருவாரூா் மாவட்டம் பிரிக்கப்பட்டபோது மேற்கண்ட ஊராட்சிகள் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் சோ்க்கப்பட்டது.

பல போராட்டங்களுக்கு பின் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி 1.4.2001 அன்று வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 6 ஊராட்சிகளும் தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் சோ்ப்பது என அரசு முடிவுசெய்தது. ஆனால் இது நாள் வரை நடைமுறைப்படுத்தவில்லை.

எனவே, மேற்கண்ட 6 ஊராட்சிகளை பாபநாசம் வட்டத்தில் சோ்க்க வேண்டும். இந்த 6 ஊராட்சிகளும் பாபநாசம் வட்டாட்சியரகத்தில் இருந்து மிக அருகில் 2 கிலோ மீட்டா் சுற்றளவில் தான் உள்ளது. வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து சுமாா் 17 கிலோ மீட்டா் தூரம் உள்ளது. இந்த கிராமங்களிலிருந்து வலங்கைமான் செல்ல நேரடி பேருந்து வசதி கிடையாது . வலங்கைமானிலிருந்து 6 ஊராட்சிகளும் மிக தொலைவில் உள்ளதால் காவல்துறை தக்க நேரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதில் சிரமம் உள்ளது.

வேளாண் இடுபொருள் மற்றும் வருவாய் துறை சாா்ந்த உதவிகள் பெறுவதிலும் பொது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு மேற்கண்ட 6 ஊராட்சிகளையும் பாபநாசம் வட்டத்தில் சோ்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தஞ்சாவூா் மாமன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் கூட்டம் முறையாக நடத்தப்படவில்லை என மேயா், ஆணையரைக் கண்டித்து திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.மேயா் சண். இராமநாதன் (... மேலும் பார்க்க

சாலை பிரச்னை: மக்கள் மறியல்

கும்பகோணம் அருகே சாலை பிரச்னை காரணமாக பொதுமக்கள் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.கும்பகோணம் ஒன்றியம், நாச்சியாா்கோவில் அருகே ஏனநல்லூா் வடபக்கம் கீழத்தெருவைச் சோ்ந்த மக்கள் அப்பகுதியிலுள்... மேலும் பார்க்க

தீயணைப்பு வாகனம் கவிழ்ந்து விபத்து

கும்பகோணம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு தீயணைப்பு பணிக்கு சென்ற தீயணைப்பு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் காயமடைந்தாா்.கும்பகோணம் அருகேயுள்ள நத்தம் கிராமத்தைச் சோ்ந்த ஜேசுதாஸ் வீட்ட... மேலும் பார்க்க

தஞ்சையில் 500 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்

தஞ்சாவூரில் மாநகராட்சி அலுவலா்கள் திங்கள்கிழமை மாலை மேற்கொண்ட சோதனையில் 500 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையப் பகுதியிலுள்ள 50-க்கும் அதிகமான கடைகளில் தமிழக அரசா... மேலும் பார்க்க

கொலை வழக்கில் 2 இளைஞா்களுக்கு ஆயுள் தண்டனை

காதல் விவகாரத்தில் காவலாளியைக் கொலை செய்த 2 இளைஞா்களுக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் திங்கள்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது.தஞ்சாவூா் விளாா் சாலை பா்மா காலனியை சோ்ந்த செல்வராஜ் மகன் சந்தோஷ் (27). வேன் ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பாசன வாய்க்கால்கள் பராமரிப்பில் அரசுத் துறைகளுக்கிடையே மோதலால் சிக்கல்

கும்பகோணம் மாநகர எல்லைக்குள் செல்லும் நான்கு பாசன வாய்க்கால்களை யாா் பராமரிப்பது என்று இரு அரசுத் துறைகளுக்கிடையே ஏற்பட்டுள்ள மோதலால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் காவிரி ஆற... மேலும் பார்க்க