செய்திகள் :

பாமக உள்கட்சி பிரச்னையில் யாரும் தலையிட முடியாது: நயினார் நாகேந்திரன்

post image

பாமகவில் நடக்கும் பிரச்னை அவர்களது உள்கட்சி பிரச்னை என்றும் அதில் யாரும் தலையிட முடியாது, பாஜகவும் தலையிடாது என நெல்லையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

நெல்லையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுடன் பேசுகையில்,

பாமகவில் நடக்கும் பிரச்னை அவர்களது உள்கட்சி பிரச்னை என்றும் அதில் யாரும் தலையிட முடியாது, பாஜகவும் தலையிடாது என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை கவலை அளிப்பதாக உள்ளது. பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்னை உள்ளது. அதனை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கததால் நெல்லை உள்பட பல மாவட்டங்களில் மஞ்சள் காமாலை நோய் பரவி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு உலக அளவில் உயர்கிறது!

சட்டப்பேரவையில் 30 நாளுக்குள் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும் என்று அமைச்சர் நேரு தெரிவித்திருந்த நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், நடிகர் கமலஹாசன் தேவை இல்லாத கருத்துகளை தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்க இருக்கும் அவர் சர்ச்சைக்குரிய பேச்சு, கருத்துகளை தெரிவிப்பதை நிறுத்திக் கொண்டு பொறுப்புள்ள கட்சித் தலைவராக நடந்து கொள்ள வேண்டும். கன்னடத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒருவரால் தனக்கு ஆபத்து ஏற்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ள கருத்து மிகவும் தவறானது என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா..?: காலியிடங்கள் 400!

5 நாள் அரசுமுறைப் பயணமாக பியூஷ் கோயல் பிரான்ஸ், இத்தாலி பயணம்

புது தில்லி: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் பியூஷ் கோயல் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றார். இதனைத் தொடர்ந்து 2 நாள் அரசுமுறைப் பயணமாக இத்தாலி ச... மேலும் பார்க்க

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு!

சென்னை: கோடை விடுமுறை நிறைவடைந்த நிலையில் தமிழகத்தில், மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளும் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்படவுள்ளன.தமிழக பள்ளிக்கல்வியில் பத்தாம் வகுப்ப... மேலும் பார்க்க

பிரதமர் மோடி - ஆசிய வளர்ச்சி வங்கி தலைவர் சந்திப்பு

புது தில்லி: ஆசிய வளா்ச்சி வங்கி தலைவா் மசாடோ காண்டாவை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா்.கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் விரைவான மாற்றம், எண்ணற்ற மக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது என... மேலும் பார்க்க

மே மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டியது!

புது தில்லி: நாட்டில் தொடா்ந்து இரண்டாவது மாதமாக (மே) சரக்கு-சேவை வரி வசூல் ரூ.2 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.கடந்த 2017 ஜூலை 1 ஆம் தேதி சரக்கு-சேவை வரி அமல்படுத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இதுவர... மேலும் பார்க்க

ஓய்வு பெற்றவா்களை மீண்டும் அரசுப் பணி: நயினாா் நாகேந்திரன் கண்டனம்

சென்னை: ஓய்வு பெற்றவா்களை மறுசுழற்சி செய்து மீண்டும் அரசுப் பணிகளில் பணியமா்த்துவது ஏற்றுக்கொள்ளமுடியாது, கண்டனத்திற்குரியது என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா்... மேலும் பார்க்க

எந்த அமித்ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது. தில்லிக்கு தமிழ்நாடு எப்பவுமே 'கட்டுப்பாட்டை மீறியது'தான். இதை மக்களிடம் நாம் எடுத்துச் செல்ல வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியுடன் தெரிவித்தார்.மதுரையி... மேலும் பார்க்க