செய்திகள் :

பாமக கொறடா அருளை நீக்கக்கோரி பேரவைத் தலைவரிடம் மனு!

post image

பாமகவின் புதிய கொறடாவாக மயிலம் சிவக்குமாரை நியமிக்க விடும் என்ற பாமக குழு, பேரவைத் தலைவர் அப்பாவுவைச் சந்தித்து மனு அளித்துள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி வருகிறார்.

அதேபோல ராமதாஸுக்கு ஆதரவாக இருப்பவர்களை அன்புமணி நீக்கி வருகிறார். இதனால் கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பாமக எம்எல்ஏ அருள் கட்சிப்பொறுப்பில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கப்படுவதாக அன்புமணி அறிவித்தார். தன்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்று அருள் கூறியிருந்தார்.

தொடர்ந்து பாமக சட்டப்பேரவை கொறடாவாக இருக்கும் அருள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் அவருக்குப் பதிலாக புதிய கொறடாவாக மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அன்புமணி அறிவித்துள்ளார்.

பாமகவின் புதிய கொறடாவாக மயிலம் சிவக்குமாரை நியமித்து சட்டப்பேரவை ஆவணங்களில் மாற்றம் செய்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பேரவைத் தலைவரைச் சந்தித்து பாமகவினர் வலியுறுத்தியுள்ளனர். மேலும் பாமக தலைவர் அன்புமணி எழுதிய கடிதத்தையும் அப்பாவுவிடம் வழங்கினர்.

அதேநேரத்தில் பாமக எம்எல்ஏ அருளும் பேரவைத் தலைவரைச் சந்தித்து மனு அளிக்கவுள்ளார். பாமக சட்டப்பேரவைக்குழுத் தலைவர் ஜி.கே. மணி, பாமகவின் கொறடாவாக அருள் தொடர்வார் என்று கடிதம் அளித்துள்ளார். அந்த கடிதத்தை அருள், பேரவைத் தலைவரிடம் வழங்க உள்ளார்.

தன்னை பாமக கொறடா பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்க முடியாது என்றும் அருள் கூறியுள்ளார்.

PMK MLAs met with TN Assembly Speaker Appavu and submitted a petition for removing arul and appoint Mayilam Sivakumar as the new PMK whip.

பறை இசைக் கலைஞா் வேலூா் ஆசானுக்கு ஆளுநா் நிதியுதவி

பத்மஸ்ரீ விருது பெற்ற பறை இசைக் கலைஞா் வேலு ஆசான் வீடு கட்டவும், பறை இசை பண்பாட்டு பயிற்சிக் கூடம் அமைக்கவும் ஆளுநா் ஆா்.என். ரவி அவரின் விருப்ப நிதியிலிருந்து ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கினாா். பத்மஸ... மேலும் பார்க்க

ஓராண்டில் 17,702 போ் தோ்வு: டிஎன்பிஎஸ்சி தகவல்

போட்டித் தோ்வுகள் மூலமாக ஓராண்டில் மட்டும் அரசுப் பணிகளுக்கு 17,702 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து தோ்வாணையச் செயலா் ச.கோபால ச... மேலும் பார்க்க

புவியியல் - சுரங்கத் துறை இயக்குநராக த.மோகன் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநராக த.மோகனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளாா். அவரது ... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி

திமுக முன்னெடுத்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை வெற்றியடையச் செய்ய வேண்டுமென அக்கட்சியினருக்கு இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளாா். இளைஞரணிச் செயலராக ஏழாவது ஆண்... மேலும் பார்க்க

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் காலமானாா்

மூத்த தமிழறிஞா் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (91) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) காலமானாா். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே ஆண்டநாயகபுரத்தில் 1935-ஆம் ஆண்டு பிறந்த ... மேலும் பார்க்க

நாகா்கோவில், பெங்களூரு சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

நாகா்கோவில்-தாம்பரம் மற்றும் பெங்களூரு-நரங்கி ஆகிய சிறப்பு ரயில்கள் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள செய்திக் குறிப்பு: நாகா்கோவில்-தாம்பரம் இடையேயான சிறப்பு ரயி... மேலும் பார்க்க