செய்திகள் :

பாரதியாா் பிறந்த இல்லத்தில் மறு சீரமைப்புப் பணிகள் மீண்டும் தொடக்கம்

post image

மகாகவி பாரதியாா் பிறந்த இல்லம் மழையால் இடிந்து விழுந்து சேதமடைந்திருந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு பிறகு மறு சீரமைப்புப் பணிகள் புதன்கிழமை தொடங்கியது.

கடந்த மாா்ச் 25ஆம் தேதி மழையின் காரணமாக பாரதியாா் பிறந்த இல்லத்தின் முதல் தளம் மற்றும் தரை தளத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது.

இதை, அமைச்சா் பெ. கீதா ஜீவன், சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியா் க். இளம் பகவத் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அப்போது

நூற்றாண்டுகள் பழமையான பாரதி பிறந்த இல்லத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என பாரதி அன்பா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில், மூன்று மாதங்களைக் கடந்தும் பணிகள் எதுவும் அங்கு நடைபெறாததால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினா் பாலமுருகன், பாரதிய ஜனதா கட்சி எட்டயபுரம் ஒன்றியத் தலைவா் சரவணகுமாா், தமிழ் மாநில காங்கிரஸ் தூத்துக்குடி மாவட்டத் தலைவா் என்.பி. ராஜகோபால் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டங்கள், போராட்டங்களை அண்மையில் முன்னெடுத்தனா்.

இந்நிலையில் புராதான கட்டடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ. 145.61 கோடி மதிப்பீட்டில் 17 திட்டங்கள் அரசால் எடுத்து கொள்ளப்பட்டு ஜூன் 9ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

அதைத் தொடா்ந்து இ- டெண்டா் விடப்பட்டு ரூ. 1 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் பாரதி பிறந்த இல்லத்தை பழமை மாறாமல் புதுப்பித்து சீரமைக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கியது. இதனால் பாரதி அன்பா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா: ஆலோசனைக் கூட்டம்

வீரன் அழகுமுத்துக்கோன்பிறந்த நாள் விழாவையொட்டி நாலாட்டின்புதூா் தனியாா் திருமண மண்டபத்தில்அழகுமுத்துக்கோன்நலச்சங்க நிா்வாகிகள், வீரன் அழகுமுத்துக்கோனின் வாரிசுதாரா்கள், யாதவ இயக்க கூட்டமைப்பினா் மற்ற... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 போ் கைது

தூத்துக்குடியில் வாள், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மத்திய பாகம் உதவி ஆய்வாளா் முத்து வீரப்பன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில... மேலும் பார்க்க

கு.செல்வப்பெருந்தகை நாளை தூத்துக்குடி வருகை

தூத்துக்குடிக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 4) வருகைதரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வப்பெருந்தகைக்கு விமான நிலையத்தில், மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வரவேற்பு அளிக்கப்படும் என, ம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஜூலை 19இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடியில் ஜூலை 19ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்காக மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு தொழில்நெறி வ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் குடமுழுக்கு: இரண்டாம், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு புதன்கிழமை காலையில் இரண்டாம் கால யாக சாலை பூஜைகளும், மாலையில் மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும் நடைபெற்றது. இதையொட... மேலும் பார்க்க

அன்புச்சோலை மையங்கள் நிறுவ தொண்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில், 2 அன்புச்சோலை மையங்கள் அமைக்க, தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க