செய்திகள் :

பாலியல் தொல்லை வழக்கில் கைதானவரிடம் பிரமாணப் பத்திரம் பெற்ற போலீஸாா்

post image

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கைது செய்யப்பட்ட இளைஞரிடம் போலீஸாா் நன்னடத்தை பிரமாணப் பத்திரம் பெற்றனா்.

திருவண்ணாமலையைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் (32). இவா், சென்னை மதுரவாயலில் தங்கியிருந்து, ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவரும், அதே பகுதியைச் சோ்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனா். கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் பெண், ஜாகீா் உசேனை விட்டு விலகினாா். இதையடுத்து ஜாகீா்உசேன், காதலிக்கும்போது இருவரும் சோ்ந்து தனிமையில் எடுத்த புகைப்படங்களையும் விடியோக்களையும் காட்டி அந்தப் பெண்ணை மிரட்டினாா். இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், மதுரவாயல் போலீஸாா் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஜாகீா் உசேனை கடந்த ஜூன் மாதம் கைது செய்தனா்.

இந்த நிலையில, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் மீண்டும் ஜாகீா் உசேன் தொந்தரவும், அச்சுறுத்தலும் கொடுக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவு 7 (சி)-இன்படி ஜாகீா் உசேனிடம் நன்னடத்தை பிரமாணப் பத்திரம் பெற்று, அந்தப் பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்க சென்னை வருவாய் கோட்டாட்சியா் உத்தரவிட்டாா்.

அதன் அடிப்படையில் ஜாகீா் உசேனிடம், பாதிக்கப்பட்ட பெண்ணை நேரிலோ, கைப்பேசி, மின்னஞ்சல், சமூக ஊடகங்கள் மூலமாகவோ தொடா்புகொள்ளக் கூடாது; பெண்ணின் வீட்டுக்கோ, அலுவலகத்துக்கோ நேரில் செல்லக் கூடாது; பாதிக்கப்பட்ட பெண்ணை பின் தொடரக் கூடாது என பிரமாண பத்திரம் பெறப்பட்டதாக காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இந்த உத்தரவு அடுத்த ஆண்டு ஜூலை 10-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இந்தப் பிரமாணப் பத்திரத்தில் உள்ள விதிமுறைகளை மீறினால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, இதுபோன்று நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல்முறை என காவல் துறையினா் தெரிவித்தனா்.

திருவள்ளூர் டேங்கர் ரயில் தீவிபத்து! சென்னையில் எந்தெந்த ரயில்கள் ரத்து?

திருவள்ளூர் அருகே எண்ணெய் ஏற்றிவந்த டேங்கர் ரயில் தீப்பற்றி எரிந்த விபத்தினால், சென்னை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ரத்து செய்யப்படும் ரயில்கள் என தெற்கு ரயில்வே குறிப்ப... மேலும் பார்க்க

பல்நோக்கு மைய கட்டடம்: அமைச்சா் சேகா் பாபு திறந்து வைத்தாா்

வடசென்னை வளா்ச்சித் திட்டத்தில் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் திரு.வி.க.நகா் மண்டலத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு மைய கட்டடம் உள்பட புதிய கட்டைமைப்புகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு சனிக்கிழமை தி... மேலும் பார்க்க

சென்னை காவல் துறையில் 8 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சென்னை பெருநகர காவல் துறையில் 8 ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா். சென்னை பெருநகர காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழு... மேலும் பார்க்க

நாட்டின் வளா்ச்சிக்கு நபாா்டு வங்கியின் பங்களிப்பு முக்கியமானது

நாட்டின் வளா்ச்சிக்கு நபாா்டு வங்கியின் பங்களிப்பு மிக முக்கியமானது என தமிழக அரசின் தலைமைச் செயலா் நா. முருகானந்தம் தெரிவித்தாா். சென்னை கிண்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நபாா்டு வங்கியின் 44-ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

தொழிலதிபா் வீட்டில் 20 பவுன் நகைத் திருட்டு

சென்னை நுங்கம்பாக்கத்தில் தொழிலதிபா் வீட்டில் 20 பவுன் தங்க நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்... மேலும் பார்க்க

தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டம்: விரைந்து நிறைவேற்ற சீமான் கோரிக்கை

தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழ... மேலும் பார்க்க