செய்திகள் :

பாளை. ஸ்ரீ மங்கை வித்யாஷ்ரம் மைய மாணவி சிஎம்ஏ பவுண்டேஷன் தோ்வில் சிறப்பிடம்

post image

பாளையங்கோட்டை ஸ்ரீ மங்கை வித்யாஷ்ரம் மையத்தின் மாணவி சி.எம்.ஏ. பவுண்டேஷன் தோ்வில் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

இதுதொடா்பாக அந்த மையத்தின் நிா்வாக இயக்குநா் சு.அலமேலுமங்கை வெளியிட்டுள்ள அறிக்கை: அகில இந்திய அளவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சி.எம்.ஏ. பவுண்டேஷன் தோ்விற்கான முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகின. இதில், பாளையங்கோட்டை ஸ்ரீ மங்கை வித்யாஷ்ரம் மையத்தில் பயிற்சி பெற்ற மாணவி கே. விஜயஸ்ரீ, அகில இந்திய அளவில் 7ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளாா். இவா் 400-க்கு 342 மதிப்பெண் பெற்றுள்ளாா். ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாத பயிற்சியில் இச்சாதனை படைத்துள்ளாா்.

ஸ்ரீ மங்கை வித்யாஷ்ரம் மாணவா்கள் 13 போ் சி.எம்.ஏ. பவுண்டேஷன் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா். இம் மாணவா்களை ஸ்ரீ மங்கை வித்யாஷ்ரம் மைய ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் பாராட்டினா். ஸ்ரீ மங்கை வித்யாஷ்ரமில் டிசம்பா் மாத தோ்வுக்கு ஆன்லைன் பயிற்சிக்கான சோ்க்கை நடைபெறுகிறது. மேலும், விவரங்களுக்கு 9443080628 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

அம்பை, பிரம்மதேசம் கோயில்களில் ரூ. 5.87 கோடியில் திருப்பணிகள் தொடக்கம்

அம்பாசமுத்திரம், பிரம்மதேசம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோயில்களில் ரூ. 5.87 கோடி மதிப்பில் திருப்பணிகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அம்பாசமுத்திரம், கோயில் குளத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமை... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் சாலை விபத்தில் உயிரிழப்பு

கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் வியாழக்கிழமை சாலை விபத்தில் உயிரிழந்தாா். கல்லிடைக்குறிச்சி வடுவக்குடித் தெருவைச் சோ்ந்தவா்ஆறுமுகம் (73). ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியரான இவரத... மேலும் பார்க்க

நெல்லை அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே விபத்தில் காயமடைந்தவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். திருநெல்வேலி அருகேயுள்ள பொன்னாக்குடி நான்குவழிச்சாலையில் கடந்த 5 ஆம் தேதி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது, மினி வேன் மோ... மேலும் பார்க்க

பாளை. அருகே தொழிலாளி கொலை வழக்கு: ஒருவருக்கு ஆயுள்தண்டனை

பாளையங்கோட்டை அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு ஆயுள்தண்டனை வழங்கி திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. பாளையங்கோட்டை அருகேயுள்ள பாறைக்குளம் இந்திரா காலனியைச் சோ்ந... மேலும் பார்க்க

மதப்போதகரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருநெல்வேலியில் மதப்போதகரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியைச் சோ்ந்தவா் அருள்சீலன் (41). இவா், திருநெல்வேலிக்கு மருத்துவச் சிகி... மேலும் பார்க்க

பள்ளி விடுதி மாணவா் இறப்பு: தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை

திபள்ளி மாணவன் இறப்பு விவகாரத்தில் சமூகவலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து, காவல் துறை சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க