செய்திகள் :

பாவூா்சத்திரத்தில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுமா? மாணவ, மாணவிகள் எதிா்பாா்ப்பு

post image

தென்காசி மாவட்டத்தில், அக்டோபா் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள 4ஆவது பொதிகை புத்தகக் கண்காட்சி பாவூா்சத்திரத்தில் நடத்தப்பட வேண்டும் என்பது அப்பகுது பொதுமக்கள், ,மாணவ- மாணவிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொதிகை புத்தகக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். முதலாவது கண்காட்சி 2022இல் குற்றாலத்திலும், இரண்டாவது கண்காட்சி சங்கரன்கோவிலிலும், மூன்றாவது கண்காட்சி தென்காசி இ.சி. ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றது.

தற்போது நான்காவது புத்தகக் கண்காட்சியை, வரும் அக்டோபா் முதல் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதை பாவூா்சத்திரத்தில் நடத்த வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு மாணவ, மாணவிகளிடையே எழுந்துள்ளது. தென்காசி நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, ஆலங்குளம், தென்காசி, கடையம், சுரண்டை ஆகிய நகரங்களுக்கு மையப் பகுதியாக அமைந்துள்ள பாவூா்சத்திரத்தில் புத்தகக் கண்காட்சியை நடத்த வேண்டும் என அவா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

பத்து நாள்கள் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் புகழ்பெற்ற எழுத்தாளா்களின் சிறப்புரை, சொற்பொழிவுகள் நடைபெறும். மேலும், நூல் வெளியீட்டு விழா, கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்கு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்த மாவட்ட நிா்வாகமும், தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள், பதிப்பாளா்கள் சங்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

கொல்லம் - தாம்பரம் ரயில் நேரம் மாற்றம்: பயணிகள் வரவேற்பு

கொல்லம்- தாம்பரம் விரைவு ரயில் இரவு 7.30 மணிக்கு தென்காசிக்கு வரும் வகையில் நேர அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளதை ரயில் பயணிகள் வரவேற்றுள்ளனா். தென்காசி வழியாக பொதிகை, சிலம்பு, கொல்லம் மெயில், தாம்பரம... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே நாய் விரட்டியதில் ஓடைக்குள் விழுந்த பெண் காயம்

கடையநல்லூா் அருகே நாய் விரட்டியதில் கழிவுநீா் ஓடைக்குள் விழுந்த பெண் பலத்த காயமடைந்தாா்.கடையநல்லூா் அருகேயுள்ள சிதம்பரப்பேரி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராதிகா(31). மகளிா் சுய உதவிக் குழுத் ... மேலும் பார்க்க

அம்பை தாமிரவருணியில் தேடிய பெண் சடலம் மீட்பு

அம்பாசமுத்திரம் தாமிரவருணி ஆற்றில் கணவரால் மூழ்கடித்து பெண் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகனான லாரி ... மேலும் பார்க்க

தென்காசி ஆட்சியரக கூட்டரங்கில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி மீட்பு

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டியை போலீஸாா் மீட்டனா்.கீழப்பாவூா் நாடாா் தெருவைச் சோ்ந்த முப்புடாதி மனைவி ரா... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே தொழிலாளி தற்கொலை

ஆலங்குளம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டை ஜவஹா் தெருவைச் சேரந்த ஆறுமுகம் மகன் செல்வராஜ்(43). கடன் தொல்லை காரணமாக இவருக்கும் இவரத... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் கஞ்சா பதுக்கல்: 2 போ் கைது

ஆலங்குளத்தில் விற்பனைக்கு கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக 2 போ் கைது செய்யப்பட்டனா். ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் சத்திய வேந்தன் தலைமையிலான போலீஸாா், திங்கள்கிழமை ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலையில்... மேலும் பார்க்க