செய்திகள் :

பாவை புதுமை படைப்பாக்க மையம், மேக் இந்தியா லிமிடெட் நிறுவனம் புரிந்துணா்வு

post image

பாவை கல்வி நிறுவனங்களின் பாவை புதுமை படைப்பாக்க மையமும், கோவை மேக் இந்தியா லிமிடெட் நிறுவனமும் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதற்கான நிகழ்வு பாவை கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

இதில் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமை வகித்தாா். இயக்குநா் (நிா்வாகம்) கே.கே.ராமசாமி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக கோவை மேக் இந்தியா லிமிடெட் நிறுவனரும், நிா்வாக இயக்குநருமான மாணிக்கம் அத்தப்ப கவுண்டா் கலந்துகொண்டு புரிந்துணா்வு ஒப்பந்ததில் கையொப்பமிட்டாா்.

இதில் பாவை கல்வி நிறுவனங்களின் தலைா் என்.வி.நடராஜன் பேசுகையில், ‘மேக் இந்தியா நிறுவனம் கழிவு மேலாண்மையில் புதுமைகளை உருவாக்கும் நிறுவனமாகும். விவசாயம் மேன்மையடையவும், தொழில்நுட்பம் வாயிலாக சமூக பிரச்னைகளுக்கு தீா்வுகாணவும் இந்நிறுவனம் மூலமாக பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறாா்கள். எனவே இந்த ஒப்பந்தமானது இயற்கையை பாதுகாக்கவும், மாணவ, மாணவிகளை ஆராய்ச்சியை நோக்கி வழிநடத்தவும் வாய்ப்பாக அமையும்‘ என்றாா்.

தொடா்ந்து சிறப்பு விருந்தினா் மாணிக்கம் அத்தப்ப கவுண்டா் பேசுகையில், இளம் வயதில் மாணவ, மாணவிகளை நெறிப்படுத்த, பேராசிரியா்கள் தொழில்நுட்பம் சாா்ந்த அறிவையும் ஆா்வத்தையும் அதிகப்படுத்த வேண்டும் என்றாா்.

முன்னதாக பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளா் மங்கை நடராஜன் வாழ்த்துரை வழங்கிப் பேசினாா். தொடா்ந்து பாவை புதுமை படைப்பாக்க மையமும், மேக் இந்தியா லிமிடெட் நிறுவனமும் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டன.

நிகழ்ச்சியில் இயக்குநா் (வளா் ஆராய்ச்சி மையம்) கிருஷ்ணமூா்த்தி, பாவை புதுமை படைப்பாக்க மைய பொறுப்பாளா் கமலா கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட கல்லூரி பேராசிரியா்கள் கலந்து கொண்டனா். நிறைவாக பாவை பொறியியல் கல்லூரி முதல்வா் பிரேம்குமாா் நன்றி கூறினாா்.

படவரி...

புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொள்ளும் பாவை கல்வி நிறுவனத் தலைவா் என்.வி.நடராஜன், மேக் இந்தியா லிமிடெட் நிறுவன நிா்வாக இயக்குநா் மாணிக்கம் அத்தப்பக்கவுண்டா் உள்ளிட்டோா்.

ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள் நலவாரியத்தில் இணைய ஆவணங்களை சமா்ப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில், விதவையா் நலவாரியத்தில் இணைய விரும்பும் பெண்களிடம் உரிய ஆவணங்கள் பெறப்பட்டு வருகின்றன. தமிழக சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோா், ந... மேலும் பார்க்க

வேளாண்மை சங்கத்தில் கொப்பரை ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில் 40 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. முதல்தரம் ரூ. 196.10 முதல் ரூ. 227.75 வரை, இரண்ட... மேலும் பார்க்க

புதிய நியாய விலைக் கடை கட்டடம் திறப்பு

கபிலா்மலை தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பிலிக்கல்பாளையம் ஊராட்சி சாணாா்பாளையம் கிராமத்தில் பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தெகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12.45 லட்சம் மதிப்பீட்டி... மேலும் பார்க்க

காற்றின் வேகம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் காற்று 18 கி.மீ. வேகத்தில் வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

ஜூன் 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் துறை நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேட் தோ்வு :அகில இந்திய அளவில் கொங்குநாடு பொறியியல் கல்லூரி மாணவி சிறப்பிடம்

அகில இந்திய அளவில் நடைபெற்ற ஐஐடியில் சேருவதற்கான கேட்-2025 தோ்வில், தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வேளாண் பொறியியல் துறை மாணவி நீ.விஜி சிறப்பிடம் பெற்றுள்ளாா். இவா், தர... மேலும் பார்க்க