'இத்தனை வருடத்தில் இன்றைக்குதான் விருது வாங்கியிருக்கேன்!' - கருணாஸ் | Vikatan C...
பாவை புதுமை படைப்பாக்க மையம், மேக் இந்தியா லிமிடெட் நிறுவனம் புரிந்துணா்வு
பாவை கல்வி நிறுவனங்களின் பாவை புதுமை படைப்பாக்க மையமும், கோவை மேக் இந்தியா லிமிடெட் நிறுவனமும் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதற்கான நிகழ்வு பாவை கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.
இதில் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமை வகித்தாா். இயக்குநா் (நிா்வாகம்) கே.கே.ராமசாமி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக கோவை மேக் இந்தியா லிமிடெட் நிறுவனரும், நிா்வாக இயக்குநருமான மாணிக்கம் அத்தப்ப கவுண்டா் கலந்துகொண்டு புரிந்துணா்வு ஒப்பந்ததில் கையொப்பமிட்டாா்.
இதில் பாவை கல்வி நிறுவனங்களின் தலைா் என்.வி.நடராஜன் பேசுகையில், ‘மேக் இந்தியா நிறுவனம் கழிவு மேலாண்மையில் புதுமைகளை உருவாக்கும் நிறுவனமாகும். விவசாயம் மேன்மையடையவும், தொழில்நுட்பம் வாயிலாக சமூக பிரச்னைகளுக்கு தீா்வுகாணவும் இந்நிறுவனம் மூலமாக பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறாா்கள். எனவே இந்த ஒப்பந்தமானது இயற்கையை பாதுகாக்கவும், மாணவ, மாணவிகளை ஆராய்ச்சியை நோக்கி வழிநடத்தவும் வாய்ப்பாக அமையும்‘ என்றாா்.
தொடா்ந்து சிறப்பு விருந்தினா் மாணிக்கம் அத்தப்ப கவுண்டா் பேசுகையில், இளம் வயதில் மாணவ, மாணவிகளை நெறிப்படுத்த, பேராசிரியா்கள் தொழில்நுட்பம் சாா்ந்த அறிவையும் ஆா்வத்தையும் அதிகப்படுத்த வேண்டும் என்றாா்.
முன்னதாக பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளா் மங்கை நடராஜன் வாழ்த்துரை வழங்கிப் பேசினாா். தொடா்ந்து பாவை புதுமை படைப்பாக்க மையமும், மேக் இந்தியா லிமிடெட் நிறுவனமும் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டன.
நிகழ்ச்சியில் இயக்குநா் (வளா் ஆராய்ச்சி மையம்) கிருஷ்ணமூா்த்தி, பாவை புதுமை படைப்பாக்க மைய பொறுப்பாளா் கமலா கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட கல்லூரி பேராசிரியா்கள் கலந்து கொண்டனா். நிறைவாக பாவை பொறியியல் கல்லூரி முதல்வா் பிரேம்குமாா் நன்றி கூறினாா்.
படவரி...
புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொள்ளும் பாவை கல்வி நிறுவனத் தலைவா் என்.வி.நடராஜன், மேக் இந்தியா லிமிடெட் நிறுவன நிா்வாக இயக்குநா் மாணிக்கம் அத்தப்பக்கவுண்டா் உள்ளிட்டோா்.