செய்திகள் :

பிஏபி வாய்க்காலில் குளித்த கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலி!

post image

சூலூர்: சுல்தான்பேட்டை அருகே பிஏபி வாய்க்காலில் குளித்த கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் சுல்தான்பேட்டை அருகே தாசன் நாயக்கன்பாளையம் வழியாக பிஏபி வாய்க்கால் செல்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பொள்ளாச்சி தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் நண்பர்களுடன் பிஏபி வாய்க்காலில் குளிக்க இறங்கி உள்ளனர்.

நண்பர்கள் குளித்துக்கொண்டிருந்த போது  சேலம் சின்ன மேட்டூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகன் தரணிதரன் ( 19) நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இது பற்றி அவரது குடும்பத்தினர் கோமங்கலம் காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என புகார் தெரிவித்தனர்.

இந்த விசாரணையின்போது திங்கள்கிழமை சுல்தான்பேட்டை போலீஸார் தாசன் நாயக்கன்பாளையம் அருகே பிஏபி வாய்க்கால் பகுதியில் தரணிதரன்  உடல் ஒதுங்கி இருந்ததைக் கண்டறிந்து, உடலை மீட்டு இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர்.

இதையும் படிக்க: தங்கம் விலை தொடர்ந்து குறைவு! இன்றைய நிலவரம்!

தொடர்ந்து, தரணிதரன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். தரணிதரன் உடல் மீட்கப்பட்டு உடற்கூறாய்வுக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பிஏபி வாய்க்காலில் தண்ணீர் செல்லும்போது குளிப்பதற்காகவும் நீச்சல் பயிற்சி செய்வதற்கும் தண்ணீரில்  இறங்க வேண்டாம் என எச்சரிக்கை பலகை பல இடங்களில் வைத்திருந்தும் இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றது.

பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இத்தகைய செயலில் ஈடுபடக் கூடாது என சுல்தான் பேட்டை போலீஸார் கேட்டுக்கொண்டனர்.

எரிவாயு டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்!

தென்மாநிலங்கள் முழுவதும் 4 நாட்களாக நீடித்து வந்த எல்பிஜி டேங்கர் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள க... மேலும் பார்க்க

சமந்தா முதல் படத்தின் டீசர்! சீரியல் கதைகளுடன் தொடர்புடைய சுபம்!

சமந்தா தயாரித்துள்ள முதல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சுபம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், சீரியல் கதைகளை விரும்பிப் பார்க்கும் ஆவி புகுந்த பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்குப்... மேலும் பார்க்க

பிறை தென்பட்டது! நாளை ரமலான் பண்டிகை - தலைமை காஜி அறிவிப்பு

பிறை தென்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் நாளை (மார்ச் 31) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கியில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

எந்த ஒரு கட்சியையும் அழித்து வளராது பாஜக: அண்ணாமலை

எந்த ஒரு கட்சியையும் அழித்து பாஜக வளராது என்று அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி க... மேலும் பார்க்க

அவிநாசி: பத்திரப்பதிவுக்கான தடைச் சான்றை நீக்காததைக் கண்டித்து ஏப். 1-ல் போராட்டம்!

அவிநாசியில் திருமுருகன்பூண்டி கோயிலுக்குச் சொந்தமான இடத்தைத் தவிர மற்ற நிலங்களுக்கு பெற்றுள்ள பத்திரப் பதிவுக்கான தடை சான்றை நீக்காததைக் கண்டித்து, திருமுருகன்பூண்டி கோயில் செயல் அலுவலகம் முன் ஏப்ரல் ... மேலும் பார்க்க

ராமேசுவரம்: தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள்! உதவுகேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை

ராமேசுவரத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் நாடுதிரும்ப உதவுமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்தவர்கள், மீண்டும் தாயகம் திரும்ப உதவுமாறு மத்திய, மாநில அரசிட... மேலும் பார்க்க