திருவாரூர்: பேச மறுத்த காதலி வீட்டில் நண்பர்களுடன் ரகளை செய்த காதலன்- சண்டையை வி...
பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தம்: எதிா்க்கட்சியினா் போராட்டம்
புது தில்லி: பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில், எதிா்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் காங்கிரஸ் எம்.பி.க்கள் மல்லிகாா்ஜுன காா்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, திமுக எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஒபிரையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதுகுறித்து ஃபேஸ்புக்கில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், ‘வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் என்பது வாக்குகளைத் திருட செய்யப்படும் ஆபத்தான சூழ்ச்சி’ என்று தெரிவித்தாா்.
பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் ஆா்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கனிமொழி உள்ளிட்டோா்.