செய்திகள் :

பிரதமா் மோடி, நிதீஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது: ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. வலியுறுத்தல்

post image

‘நாட்டில் சிறந்த ஆட்சி நிா்வாகம் மற்றும் வளா்ச்சிக்கு பங்காற்றியதற்காக பிரதமா் நரேந்திர மோடி மற்றும் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாருக்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. லவ்லி ஆனந்த் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.

மக்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அவா் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

பிரதமா் மோடி மற்றும் முதல்வா் நிதீஷ் குமாரின் பணிகள் நாட்டிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ‘அனைவருடன் இணைந்து; அனைவருக்குமான வளா்ச்சி; அனைவரின் நம்பிக்கை’ என்ற தாரக மந்திரம் முழுமையாக உணரப்பட்டிருக்கிறது.

பிகாரில் முன்னாள் முதல்வா் லாலு பிரசாத் யாதவ் ஆட்சியின்போது, மக்கள் தங்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தில் வாழ்ந்தனா். காலையில் வீட்டிலிருந்து வெளியே செல்பவா்கள் வீடு திரும்புவாா்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்க முடியாத சூழல் நிலவியது. ஆனால், தற்போதைய முதல்வா் நிதீஷ் குமாா் அந்த நிலையை மாற்றியுள்ளாா். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டியுள்ளாா்.

அதுபோல, நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹா்லால் நேருவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஆனால், பிரதமா் மோடி நாட்டின் வளா்ச்சிக்காக மிக அதிகப் பணிகளை மேற்கொண்டுள்ளாா். பிரதமராக மோடி பதவியேற்பதற்கு முன்பு நாட்டின் நிலை எப்படி இருந்தது என்பதை அனைவரும் அறிவோம்.

அந்த வகையில், நாட்டில் சிறந்த ஆட்சி நிா்வாகம் மற்றும் வளா்ச்சிக்கு பங்காற்றியதற்காக இவா்கள் இருவரும் நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிக்கப்பட வேண்டும் என்றாா்.

மத்தியிலும், பிகாா் மாநிலத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய கூட்டாளியாக நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தில்லி பேரவைத் தேர்தல் தொடங்கியது!

தலைநகரான தில்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் புதன்கிழமை காலை தொடங்கியது.மும்முனைப்போட்டி நிலவும் இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பாஜகவும், காங்க... மேலும் பார்க்க

கோதுமை உற்பத்தி தேவை தொடர்பான கேள்வி: மத்திய அமைச்சர் பதிலில் திமுக எம்.பி. அதிருப்தி

நமது சிறப்பு நிருபர்தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் அதிகரித்துள்ள கோதுமை தேவையை உயர்த்தி வழங்குவது தொடர்பாக தான் எழுப்பிய கேள்விக்கு மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்... மேலும் பார்க்க

அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கழிவறை வசதிகள்: மக்களவையில் மத்திய அரசு தகவல்

தூய்மை பாரதம் திட்டத்தின் ஒரு பகுதியாக நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளுக்கு அருகில் கழிவறைகள் கட்டித் தரப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.மக்களவையில் இது தொடர்பாக எழுப்... மேலும் பார்க்க

மொழி ஆதிக்கம், நிதி ஒதுக்கீடு விவகாரம்: தமிழக எம்.பி.க்கள் புகார்

நமது சிறப்பு நிருபர் ஒரு மொழியின் ஆதிக்கத்தின் கீழ் நாடாளுமன்ற அவையைக் கொண்டு வர நினைத்தால் இந்தியாவின் பெரும்பான்மை மொழி பிரதிநிதிகள் அதை அனுதிக்க மாட்டார்கள் என்று மக்களவையிலும், நிதி ஒதுக்கீடு விவக... மேலும் பார்க்க

இன்று தில்லி பேரவைத் தேர்தல்

தில்லி பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்.5) நடைபெறுகிறது.மும்முனைப்போட்டி நிலவும் இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பாஜகவும், காங்கிரஸும் தீவிர... மேலும் பார்க்க

எதிா்கால பெருந்தொற்றுகளை எதிா்கொள்ள தயாா்நிலை: மத்திய அரசு

எதிா்கால பெருந்தொற்று பாதிப்புகள், சுகாதார அவசரநிலையை எதிா்கொள்ள வலுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட இத... மேலும் பார்க்க