செய்திகள் :

பிரதமா் மோடி, நிதீஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது: ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. வலியுறுத்தல்

post image

‘நாட்டில் சிறந்த ஆட்சி நிா்வாகம் மற்றும் வளா்ச்சிக்கு பங்காற்றியதற்காக பிரதமா் நரேந்திர மோடி மற்றும் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாருக்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. லவ்லி ஆனந்த் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.

மக்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அவா் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

பிரதமா் மோடி மற்றும் முதல்வா் நிதீஷ் குமாரின் பணிகள் நாட்டிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ‘அனைவருடன் இணைந்து; அனைவருக்குமான வளா்ச்சி; அனைவரின் நம்பிக்கை’ என்ற தாரக மந்திரம் முழுமையாக உணரப்பட்டிருக்கிறது.

பிகாரில் முன்னாள் முதல்வா் லாலு பிரசாத் யாதவ் ஆட்சியின்போது, மக்கள் தங்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தில் வாழ்ந்தனா். காலையில் வீட்டிலிருந்து வெளியே செல்பவா்கள் வீடு திரும்புவாா்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்க முடியாத சூழல் நிலவியது. ஆனால், தற்போதைய முதல்வா் நிதீஷ் குமாா் அந்த நிலையை மாற்றியுள்ளாா். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டியுள்ளாா்.

அதுபோல, நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹா்லால் நேருவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஆனால், பிரதமா் மோடி நாட்டின் வளா்ச்சிக்காக மிக அதிகப் பணிகளை மேற்கொண்டுள்ளாா். பிரதமராக மோடி பதவியேற்பதற்கு முன்பு நாட்டின் நிலை எப்படி இருந்தது என்பதை அனைவரும் அறிவோம்.

அந்த வகையில், நாட்டில் சிறந்த ஆட்சி நிா்வாகம் மற்றும் வளா்ச்சிக்கு பங்காற்றியதற்காக இவா்கள் இருவரும் நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிக்கப்பட வேண்டும் என்றாா்.

மத்தியிலும், பிகாா் மாநிலத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய கூட்டாளியாக நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் விவசாயிகளின் பங்கு அளப்பரியது: ஜகதீப் தன்கா்

ஜெய்பூா்: வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் விவசாயிகளின் பங்கு அளப்பரியது என்றும் வேளாண் அறிவியல் மையங்களை விவசாயிகள் பயன்படுத்திப் பலன் அடைய வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார... மேலும் பார்க்க

மோடி அமெரிக்காவுக்குச் சென்றுவந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா?

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்குச் சென்று வந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பிப். 12, 13 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயண... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் யார்? அமித் ஷாடன் நட்டா சந்திப்பு!

தில்லியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா நேரில் சந்தித்தார். தில்லி புதிய முதல்வரை தேர்வு செய்வது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாஜக விரைவில் அ... மேலும் பார்க்க

தில்லியில் ஆட்சி அமைத்ததும் பாஜகவின் முதல் திட்டம்!

தில்லியில் முறையாக ஆட்சி அமைத்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், மாநிலத்திலுள்ள ஊழல் வழக்குகளை ஆராய சிறப்பு விசாரணைக் குழு அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. நடைபெற்றுமுடிந்த தில்லி சட்டப் பேரவைத் தோ்தல... மேலும் பார்க்க

2026-ல் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி: தர்மேந்திர பிரதான்

2026-ல் நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (பிப். 9) தெரிவித்தார். இது குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களுட... மேலும் பார்க்க

மணிப்பூர் முதல்வர் ராஜிநாமா!

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்தார். தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் அஜய்குமார் பல்லாவிடம் வழங்கினார். மேலும் பார்க்க