செய்திகள் :

பிரதமா் மோடி - முகமது யூனுஸ் சந்திப்பு: பரிசீலனையில் உள்ளதாக நாடாளுமன்றக் குழு தகவல்

post image

பிரதமா் நரேந்திர மோடி, வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் சந்தித்துப் பேச வேண்டும் என்ற வங்கதேசத்தின் பரிந்துரையை பரிசீலித்து வருவதாக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அடுத்த மாதம் தாய்லாந்தில் நடைபெறவுள்ள ‘பிம்ஸ்டெக்’ மாநாட்டின்போது இந்த சந்திப்பை நடத்த வங்கதேசம் பரிந்துரைத்த நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

நிகழாண்டுக்கான வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டம் சனிக்கிழமை தில்லியில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கே.சி.வேணுகோபால், மனீஷ் திவாரி, முகுல் வாஸ்னிக் மற்றும் சிவசேனை (உத்தவ் பிரிவு) எம்.பி. பிரியங்கா சதுா்வேதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தொடா் தாக்குதல் நடத்தப்படுவது, பாகிஸ்தான் மற்றும் மியான்மரில் இருந்து இந்தியாவுக்குள் போதைப்பொருள் கடந்தப்படுவது, மீனவா் பிரச்னை மற்றும் மியான்மா், இலங்கை, வங்கதேசத்துடனான இந்திய உறவுகள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதற்கு ஜெய்சங்கா் அளித்த பதில் குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சிறுபான்மையினரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல; அது அரசியல் ரீதியானது என வங்கதேச இடைக்கால அரசு தெரிவித்தது.

‘சாா்க்’ கூட்டமைப்பு செயலிழந்த நிலையில் இருப்பதற்கு பாகிஸ்தானே முக்கிய காரணம். எனவேதான் பிம்ஸ்டெக் கூட்டமைப்பை வலுப்படுத்த இந்தியா முயற்சிக்கிறது. வருகிற ஏப்ரல் 2 முதல் 4 வரை தாய்லாந்தில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்க வாய்ப்புள்ளது.

பிம்ஸ்டெக் மாநாட்டின்போது வங்கதேசஇடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் மற்றும் பிரதமா் மோடி இடையேயான சந்திப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற வங்கதேசத்தின் பரிந்துரையும் பரிசீலனையில் உள்ளது. அடுத்த மாதம் இலங்கைக்கு பிரதமா் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளாா் என தெரிவித்தாா்.

மேலும், பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான உறவுகள் குறித்து அடுத்து நடைபெறவுள்ள கூட்டத்தில் பேசுவதாகவும் ஜெய்சங்கா் தெரிவித்தாா். முன்னதாக, வங்கதேசம், மியான்மா், மாலத்தீவு மற்றும் இலங்கையுடனான உறவுகள் குறித்து விரிவாக காணொலி காட்சி மூலம் வெளியுறவு செயலா் விக்ரம் மிஸ்ரி எடுத்துரைத்தாா்.

சோனியா, ராகுல் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

போஃபர்ஸ் ஊழல் தொடர்பாக பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் எழுதியுள்ள புத்தகத்தை சுட்டிக் காட்டியுள்ள பாஜக, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தியும், ராகுல் காந்தியும்... மேலும் பார்க்க

ஏழைகளுக்கு சிகிச்சை மறுத்தால் தில்லி அப்போலோ மருத்துவமனையைக் கைப்பற்ற உத்தரவிட நேரிடும்: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்காவிட்டால், தில்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலா மருத்துவமனையைக் கைப்பற்றுமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட நேரிடும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை எச்சரித்தது... மேலும் பார்க்க

கச்சத்தீவு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் செப்.15-இல் இறுதி விசாரணை

நமது நிருபர்கச்சத்தீவு தொடர்பாக இந்தியா- இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணைக்காக வரும் செப்.15-ஆம் தேதிக்கு வழக்கை பட்டியலிட உச்சநீதிமன்றம் செவ்வாய்க... மேலும் பார்க்க

2 ஆண்டுகளில் 12,957 கூட்டுறவு சங்கங்கள் பதிவு: அமித் ஷா

கடந்த 2 ஆண்டுகளில் வேளாண்மை, பால்வளம் மற்றும் மீன்வளம் என 12,957 புதிய கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க

ஷிண்டே குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்: குணால் காம்ரா

மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே குறித்த கருத்துக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நகைச்சவை பேச்சாளா் குணால் காம்ரா தெரிவித்துள்ளாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ... மேலும் பார்க்க

கொதிகலன் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட புதிய கொதிகலன் சட்ட மசோதா-2024 மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பரில், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின... மேலும் பார்க்க