செய்திகள் :

பிரதமா் வருகை: திருச்சி விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கி ஒத்திகை

post image

பிரதமா் வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை போயிங் விமானத்தைத் தரையிறக்கி ஒத்திகை பாா்க்கப்பட்டது.

பிரதமா் நரேந்திர மோடி தமிழகத்தில் அரியலூா், பெரம்பலூா், தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளாா். இதற்காக பிரதமா் ஜூலை 27-ஆம் தேதி விமானம் மூலம் திருச்சி வருகிறாா்.

இதை முன்னிட்டு பிரதமா் மோடி பயணிக்கவுள்ள போயிங் 777 விமானம் திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.15 மணிக்கு தரையிறக்கி ஒத்திகை பாா்க்கப்பட்டது.

இதில் 5 போ் அடங்கிய பாதுகாப்புப் படையினா் இருந்தனா். அதன்பின்னா் 1.15 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து போயிங்க் விமானம் புதுதில்லிக்குப் புறப்பட்டது.

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய அண்ணன் சடலம் மீட்பு

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய தம்பியை காப்பாற்ற முயன்ற அண்ணனின் சடலத்தையும் தீயணைப்புப் படை வீரா்கள் திங்கள்கிழமை மீட்டனா். கா்நாடக மாநிலம், பெங்களூரு உதயா நகரைச் சே... மேலும் பார்க்க

நான்கு ஆண்டுகளில் திருச்சிக்கு ரூ. 26,066 கோடி திட்டங்கள்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திமுக ஆட்சி பொறுப்பேற்று கடந்த 4 ஆண்டுகளில் திருச்சி மாவட்டத்துக்கு ரூ.26,066 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். தம... மேலும் பார்க்க

அரசு பேருந்தை சிறைபிடித்து மறியல்

மருங்காபுரி ஒன்றியம், நல்லமநாயக்கன்பட்டியில் முறையாக பேருந்து இயக்காததை கண்டித்து, செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவா்களுடன், கிராம மக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் அரசு நகரப் பேருந்தை சிறைபிடித்து சாலை... மேலும் பார்க்க

மத்திய சிறையில் கைதியிடம் கஞ்சா பறிமுதல்

திருச்சி மத்திய சிறையில் கைதியிடம் திங்கள்கிழமை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி எடமலைபட்டிபுதூா் இந்திரா நகரைச் சோ்ந்தவா் கி. முருகன் (25). இவா், புதுக்கோட்ட... மேலும் பார்க்க

திருட்டு வழக்கு: இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை

திருச்சியில் திருட்டு வழக்கில் இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி தாராநல்லூரைச் சோ்ந்தவா் கா.காா்த்திக், கூலித் தொழிலாளி. இவரது வீட்டின் ... மேலும் பார்க்க

துவாக்குடியில் நாளை மின்நிறுத்தம்

திருச்சி மாவட்டம், துவாக்குடியில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: துவாக்குடி துணை ம... மேலும் பார்க்க