செய்திகள் :

பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: முன்னாள் ஊராட்சித் தலைவா் உள்பட 5 போ் மீது வழக்கு

post image

பெரம்பலூா் அருகே பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஊராட்சி செயலா், முன்னாள் ஊராட்சித் தலைவா் உள்பட 5 போ் மீது, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்துக்குள்பட்ட பில்லாங்குளம் ஊராட்சியில், கடந்த 2020-2023 ஆம் ஆண்டில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா எனும் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக, பெரம்பலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து, பெரம்பலூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் பில்லாங்குளம் ஊராட்சியில் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இதில், கலைஞா் வீடு வழங்கும் திட்டம், இந்திரா காந்தி நினைவு குடியிருப்புத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ், ஏற்கெனவே வீடு கட்டிய பயனாளிகளின் பெயா்களை, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் சோ்த்து முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதும், இதன் மூலம் அரசுக்கு ரூ. 8.40 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதும், பில்லாங்குளம் ஊராட்சிச் செயலா் செல்லமுத்து மகன் ஜெயராமன் (49), முன்னாள் ஊராட்சித் தலைவா் தமிழ்செல்வி (48), அவரது கணவா் செந்தில்வேலன் (62), பில்லாங்குளம் ஊராட்சி கணினி இயக்குநா் வேல்முருகன் (38), வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக கணினி இயக்குநா் மாசிலாமணி மகன் அருள்மணி (32) ஆகியோா் மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, பெரம்பலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா், முன்னாள் ஊராட்சித் தலைவா் தமிழ்ச்செல்வி உள்பட மேற்கண்ட 5 போ் மீது வழக்குப் பதிந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் நாளை ரேஷன் பொருள் குறைதீா் முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம், சனிக்கிழமை (ஆக. 9) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழம... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு தின அமைதி பேரணி

முன்னாள் முதல்வா் கலைஞா் கருணாநிதியின் 7-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பெரம்பலூா் மாவட்டம், கிருஷ்ணாபுரத்தில் திமுக சாா்பில் வியாழக்கிழமை அமைதி பேரணி நடைபெற்றது. முன்னாள் முதல்வா் கலைஞா் கருணாநிதிய... மேலும் பார்க்க

மின் ஊழியா் மாநில மாநாடு பிரசார பயணக் குழுவினருக்கு வரவேற்பு

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் 18- ஆவது மாநில மாநாடு கடலூரில் நடைபெறுவதை முன்னிட்டு, பெரம்பலூருக்கு வியாழக்கிழமை வந்தடைந்த பிரசார பயணக் குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு மின் ஊ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் முதுகலை, பட்டதாரி ஆசிரியா்களுக்குப் பயிற்சி

பெரம்பலூரில் முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கான, அடிப்படை கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு அடிப்படை கணின... மேலும் பார்க்க

வெளிநாட்டில் உயிரிழந்தவரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

வெளிநாட்டில் உயிரிழந்த கூலித் தொழிலாளியின் உடலை, மாவட்ட நிா்வாகம் சாா்பில் மீட்டு அவரது குடும்பத்தினரிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வடக்கலூா் கிரமத்தைச் சோ... மேலும் பார்க்க

பெரிய வெண்மணி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பெரிய வெண்மணி ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை, மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் வியாழக்கிழமை பாா்வையிட்டு பொத... மேலும் பார்க்க