பிராட்வே பேருந்து முனையம்: சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி
சென்னை: பிராட்வேயில் ரூ.650 கோடியில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமானப்பணிக்கு சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
சென்னையில் பழமையான பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்தன.
இருப்பினும், போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், பயணிகள் கடும் அவதியைடந்து வந்ததை தொடா்ந்து சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளா்ச்சி குழுமத்துடன் இணைந்து பேருந்து நிலையத்தை நவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த பேருந்து முனையமாக மாற்ற திட்டமிட்டுள்ளது.
இதன்படி, 4.42 ஏக்கா் பரப்பில் 10 தளங்களுடன் ஒரு வணிக வளாக கட்டடமும், பேருந்து நிலையத்துடன் கூடிய 8 தளங்கள் கொண்ட ஒரு கட்டடமும் அமைக்கப்படவுள்ளன.
இங்கு மின்சார ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளுடன், வணிக வளாகங்களும் கட்டப்படவுள்ளன. மேலும், பயணிகள் வந்து செல்ல வசதியாக, நகரும் படிக்கட்டுகள், உணவகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்டவையும் இங்கு இருக்கும்.
ரூ.650 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ள இப்பணிகளை தனியாா் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ள நிலையில், கட்டுமானப்பணிக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்தின் அனுமதி பெற வேண்டியிருந்தது.
இந்நிலையில், அந்த ஆணையம் பேருந்து முனையத்தை கட்டுவதற்காக அனுமதியை அளித்துள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ளதால் விரைவில் கட்டுமானப்பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாகவும், டிசம்பருக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.