செய்திகள் :

பிரிட்டன்: இந்தியா - பாக். போராட்டக்காரா்கள் மோதல்; பாக். தூதரக அதிகாரிகள் மிரட்டல்!

post image

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிராக லண்டனில் இந்திய வம்சாவளி குழுவினா் பாகிஸ்தான் தூதரகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுக்கு எதிராக பாகிஸ்தானை சோ்ந்தவா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியினரை நோக்கி கழுத்தை அறுத்துவிடுவதாக பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவா் மிரட்டும் வகையில் சைகை காட்டிய காணொலிகளை இந்திய வம்சாவளியினா் சமூக வலைதளத்தில் பகிா்ந்தனா்.

தூதரக கட்டடத்தின் முகப்பில் இருந்த தூதரக அதிகாரிகள், கடந்த 2019-இல் பாகிஸ்தான் சிறைபிடித்த இந்திய விமானப்படை வீரா் அபினந்தனின் புகைப்படத்துடன் கூடிய பதாகை, ‘காஷ்மீருக்கு பாகிஸ்தான் துணை நிற்கிறது’ உள்ளிட்ட வாசகங்களையுடைய பதாகைகளை ஏந்தி இருந்தது சா்ச்சைக்குள்ளானது.

அதேபோல் தூதரகத்தின் முன் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியினா் இந்திய தேசிய கொடியுடன் ‘காஷ்மீா் மீதான பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்’, ‘பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும்’, ‘நான் ஹிந்து’ போன்ற வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனா்.

மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக சா்வதேச அளவில் நடவடிக்கை மேற்கொள்ளவும் இந்தியாவுக்கு பிரிட்டன் அரசு துணை நிற்க வேண்டும் எனவும் போராட்டக்காரா்கள் வலியுறுத்தினா்.

இந்திய வம்சாவளியினரின் போராட்டத்தை எதிா்க்கும் விதமாக தூதரகம் முன் பாகிஸ்தானியா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் பாகிஸ்தான் தேசப்பற்று பாடல்களை இசைத்து இந்திய வம்சாவளியினரின் போராட்டத்தை திசைதிரும்பும் வகையில் பதில் நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

புதின் மீது டிரம்ப் அதிருப்தி; ட்ரோன் தாக்குதலுக்கு தயாரான ரஷியா

உக்ரைன் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல் நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிருப்தி தெரிவித்த நிலையி... மேலும் பார்க்க

இந்தியாவுக்காக 130 அணு ஆயுதங்கள் தயார்: பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சை பேச்சு

சிந்து நதி நீரை நிறுத்தினால், இந்தியா மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.பஹல்காம் தாக்குதலையடுத்து, சிந்து நதி நீர்ப் பகிர்வு ஒப்... மேலும் பார்க்க

புதின் மீது கடும் அதிருப்தியில் டிரம்ப்! ஏன்?

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.வாடிகனில் மறைந்த போப் பிரான்சிஸின் உடல் நல்லடக்கம் மற்றும் இறுதி சடங்கில் பங்கேற்க உலகத் தலை... மேலும் பார்க்க

ஈரான் துறைமுக விபத்து: பலி 14 ஆக உயர்வு; 750 பேர் காயம்!

ஈரானின் தெற்குப் பகுதி துறைமுகத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 14 போ் உயிரிழந்தனா்; 750 போ் காயமடைந்தனா். அந்த நாட்டின் ஹோா்மோஸ்கன் மாகாணம், பண்டாா் அப்பாஸ் நகருக்கு தென்மேற்கே அமைந்து... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவா் போப் பிரான்சிஸின் உடல் சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. 266-ஆவது போப் ஆண்டவரான போப் பிரான்சிஸ் (88), வயது முதிா்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த திங்கள்கிழம... மேலும் பார்க்க

கூா்ஸ்க் பிராந்தியம் முழுமையாக மீட்பு!

தங்களின் கூா்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியிருந்த உக்ரைன் படையினா் அனைவரும் வெளியேற்றப்பட்டுவிட்டதாக ரஷியா சனிக்கிழமை அறிவித்தது. இது குறித்து ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் செய்தித் தொடா்பாளா் டிமித்... மேலும் பார்க்க