செய்திகள் :

பிறந்து 10 நாளில் தனித்தனியாக தத்துக்கொடுக்கப்பட்ட இரட்டையர்கள்; 17 ஆண்டுகள் கழித்து இணைந்ததெப்படி?

post image

பிறந்து 10 நாட்களே ஆன நிலையில் வெவ்வேறு குடும்பங்களுக்கு தத்துக்கொடுக்கப்பட்ட இரட்டையர்கள் தாங்கள் சகோதரிகள் என அறியாமலே நெருங்கிய நண்பர்கள் ஆன நெகிழ்ச்சி சம்பவம், சீனாவில் நிகழ்ந்துள்ளது.

ஸாங் குவோஸின், ஹை சாவ் எனும் இரண்டு பெண்கள், சீனாவின் ஹெபே மாகாணத்தில் ஒரே நகரத்தில் வளர்ந்துள்ளனர்.

தற்செயலாக இருவரும் சந்தித்து சிறந்த நண்பர்கள் ஆகியுள்ளனர்.

Rep imag

இரண்டு பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர், தங்களால் இரண்டு குழந்தைகளை வளர்க்க முடியவில்லை என்று 10 நாட்களில் தத்துக்கொடுத்துள்ளனர்.

தத்துக்கொடுக்கும் போது அதன் முக்கிய நிபந்தனையாக, தத்துக்கொடுக்கப்படும் குடும்பங்கள் ஒரே நகரத்தில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஸாங் குவோஸின் மற்றும் ஹை சாவ் ஒரே நகரத்தில் வசித்து வந்துள்ளனர். ஒருவரை ஒருவர் தங்களின் 17 வயது வரை அறிந்து கொள்ளவில்லை.

அருகில் இருக்கும் துணிக்கடைக்கு சென்றபோது தற்செயலாக இருவரும் சந்தித்துக் கொண்டுள்ளனர். அதன் பின்னர் சிறந்த நண்பர்கள் ஆகியுள்ளனர்.

இரண்டு வருட நட்புக்கு பின்னர், இருவருக்கும் ஒரே தேதியில் பிறந்த நாள் வருவதை அறிந்துள்ளனர்.

அதன் பின்னர் குடும்பத்தினரிடம் விசாரித்த போது அவர்கள் தத்தெடுக்கப்பட்டவர்கள் என்ற உண்மை தெரியவந்துள்ளது.

நண்பர்களாக பழகிய இருவரும் உண்மையாகவே சகோதரிகள் என்று தெரியவந்தவுடன் இருவருக்கும் இடையே பாசம் அதிகரித்துள்ளது. அதை பின்னர் அருகருகே ஒரு வீட்டை வாங்கி ஒன்றாக வசித்து வருகின்றனர். இப்போது அவர்களுக்கு 37 வயதாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

"அதிர்ஷ்டவசமாக நான் ராஜா ரகுவன்சியாகவில்லை" - காதலனுடன் வாழ விரும்பிய மனைவி; வாழ்த்தி அனுப்பிய கணவன்

உத்தரப்பிரதேச மாநிலம் படாவுன் என்ற இடத்தைச் சேர்ந்த சுனில் என்பவர் குஷ்பு என்ற பெண்ணைக் கடந்த மாதம் 17ம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சில நாட்கள் கணவன் வீட்டில் இருந்த குஷ்பு சம்பிராயப்பட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள்; மத்திய அரசின் அதிர்ச்சி அறிக்கை சொல்வது என்ன?

மகாராஷ்டிரா நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் மகாராஷ்டிராவில் பொருளாதார வளர்ச்சி நகரங்களை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளது.கிராமங்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. அதுவும் பொதும... மேலும் பார்க்க

பெங்களூரு: ` கடை பெயர் பலகையில் கன்னடத்துக்கு முக்கியத்துவம் இல்லை'- வாக்குவாதம் செய்த முதியவர்

பெங்களூரில் உள்ள ஒரு கடையின் பெயர் பலகை அதிகமான கன்னட எழுத்தில் இல்லை என ஒரு முதியவர் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் இருக்கும் கடைகளில் குறைந்தது 60... மேலும் பார்க்க

Sleeping Prince: 20 ஆண்டுக்கு பின் சவுதி அரேபியாவின் 'தூங்கும் இளவரசர்' எழுந்துவிட்டாரா? Fact check!

சவுதி அரேபியாவின் இளவரசர் அல்-வலீத் பின் கலீத் பின் தலால், "தூங்கும் இளவரசர்" என்று பிரபலமாக அறியப்படுகிறார். அதற்கு காரணம் அவர் 20 ஆண்டுகளாக கோமாவில் உள்ளார்.2005 ஆம் ஆண்டு நடந்த ஒரு கார் விபத்தைத் த... மேலும் பார்க்க

மொபைல் கவர் விற்பனை செய்துகொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி; ஜார்கண்ட் சிறுவனின் இன்ஸ்பையர் ஸ்டோரி!

மொபைல் கவர் விற்பனை செய்யும் சிறுவன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். எப்படி இதனைச் சாத்தியமாக்கினார் என்பதை இங்குத் தெரிந்து கொள்ளலாம். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரோகித் குமார் எ... மேலும் பார்க்க