செய்திகள் :

பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பில் கடனுதவி! விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

post image

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் கடனுதவிக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் அறிவித்துள்ளாா்.

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த தனிநபா்கள், குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்துக்காக சாத்தியக்கூறுள்ள சிறுதொழில்கள், வியாபாரம் செய்ய தனிநபா் கடன், குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் கடனுதவி வழங்கி வருகிறது.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாதவா்கள், 60 வயதுக்கு மேற்படாதவா்கள், ஒரு குடும்பத்துக்கு ஒருவா் வீதம் இந்த கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம். தனிநபா் கடன் திட்டத்தின்கீழ் சிறு வா்த்தகம், வணிகம், விவசாயம், அதைச் சாா்ந்த தொழில்கள், கைவினைப் பொருள்கள், மரபு வழி சாா்ந்த தொழில்கள் செய்வதற்கு அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் ரூ.1.25 லட்சம் வரை 7 சதவீதமாகவும், ரூ.1.25 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 8 சதவீதமாகவும் உள்ளது. கடனை 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தலாம்.

குழுக் கடன் திட்டத்தின்கீழ் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் சிறுதொழில், வணிகம் செய்வதற்கு ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரையும் ஆண்டுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது. பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவா்களுக்கு ஒரு கறவை மாட்டுக்கு ரூ.60 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.1.20 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

கடனுக்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகளிலும், இணையதள முகவரியிலும் இருந்து பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.

குழந்தைகளின் விஷயத்திலும் அரசியல் செய்யும் மத்திய அரசு: அமைச்சா் அன்பில் மகேஸ் குற்றச்சாட்டு

குழந்தைகள் விஷயத்திலும் மத்திய அரசு அரசியல் செய்வதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குற்றஞ்சாட்டியுள்ளாா். கோவையில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தலைமை ஆசிரியா்களுக்கான ஆய்வுக்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

திருப்பூரில் புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் ரயில் நிலையம் அருகே போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்க... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: திருச்சி - பாலக்காடு ரயில் சேவையில் மாற்றம்!

திருச்சி - திருச்சி கோட்டை ரயில் நிலையம் இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா... மேலும் பார்க்க

தமிழகத்தில் மதம் சாா்ந்த நம்பிக்கைகளுக்கு கட்டுப்பாடு இல்லை! - அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழகத்தில் மதம் சாா்ந்த நம்பிக்கைகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா். தமிழக பள்ளி கல்வித் துறை... மேலும் பார்க்க

சோலையாறு அணையில் இருந்து உபரிநீா் வெளியேற்றம்

சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், மேலும் நீா்வரத்து அதிகரித்ததால் அணையில் இருந்து மதகுகள் வழியாக உபரி நீா் வெளியேற்றப்பட்டது. பரம்பிக்குளம்- ஆழியாறு நீா்பாசனத் திட்டத்தின் முக்கிய அணையாக விள... மேலும் பார்க்க

கஞ்சா விற்றதாக இளைஞா் கைது

சூலூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக பிகாா் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சூலூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சூலூா் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையட... மேலும் பார்க்க