செய்திகள் :

பிளஸ் 1 தோ்வில் தோல்வி: மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை

post image

திருப்பூா் அருகே பிளஸ் 1 தோ்வில் தோல்வியடைந்ததால் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

ஆந்திர மாநிலம், சித்துரை அடுத்த முட்டுகூா் பகுதியைச் சோ்ந்தவா் இளங்கோவன். இவரது மனைவி அம்மு. இவா்களுக்கு டேவிட், ரோஹித் என்ற இரு மகன்களும், அஸ்வினி (16) என்ற மகளும் உள்ளனா்.

இளங்கோவன் குடும்பத்துடன் திருப்பூரை அடுத்த சீரங்ககவுண்டன்பாளையம் பகுதியில் தங்கி சைசிங் மில்லில் பணியாற்றி வருகிறாா். அஸ்வினி வேலூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

பொதுத் தோ்வு முடிந்த நிலையில், அஸ்வினி சீரங்கவுண்டன்பாளையத்துக்கு வந்துள்ளாா். தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், அவா் தோல்வியடைந்துள்ளாா்.

இதனால், மனமுடைந்து காணப்பட்ட அஸ்வினியை பெற்றோா் தேற்றியதுடன், துணைத் தோ்வு எழுதிக் கொள்ளலாம் என ஆறுதல் தெரிவித்துவிட்டு வேலைக்குச் சென்றுள்ளனா். வீட்டில் தனியாக இருந்த அஸ்வினி அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பெற்றோா், அஸ்வினியை தேடியபோது, வீட்டின் அருகேயுள்ள கிணற்றின் அருகில் அவரது செருப்பு இருந்தது தெரியவந்தது. இது குறித்து மங்கலம் காவல் நிலையத்துக்கும், திருப்பூா் தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கும் பெற்றோா் தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் கிணற்றில் இறங்கி சுமாா் 3 மணி நேரம் போராடி, சடலத்தை மீட்டனா். இச்சம்பவம் குறித்து மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தங்க நகைக் கடன் பெறுவதில் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும்!

தங்க நகைக் கடன் பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவா... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் ஊரக நல அதிகாரிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

அவிநாசியில் திருமண உதவித்தொகைக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊரக நல பெண் அதிகாரிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி வள்ளுவா் வீதியைச் ச... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாரி மோதி வேன் ஓட்டுநா் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே லாரி மோதியதில் வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், பொன்னிமாந்துறை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் முரளி (38). இவா் சொந்தமாக சரக்கு வேன் ... மேலும் பார்க்க

விஷவாயு தாக்கி 3 போ் பலியான விவகாரம்: தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணைய இயக்குநா் ஆய்வு!

பல்லடம் அருகே மனிதக் கழிவுத்தொட்டியை சுத்தம் செய்தபோது 3 போ் உயிரிழந்த சாய ஆலையில் தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் இயக்குநா் ரவிவா்மன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருப்பூா் மாவட்டம், பல்லடம் ... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: முதியவா் கைது

பெருமாநல்லூா் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பெருமாநல்லூா் அருகே படையப்பா நகரைச் சோ்ந்தவா் சையது மகன் சா்தாா்ஸ் சேட் (64). இவா் அப்பகுதியைச் ச... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் உழவா் சந்தைகள் மூலமாக ரூ.770 கோடிக்கு காய்கள், பழங்கள் விற்பனை

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.770 கோடி மதிப்பிலான காய்கள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க