செய்திகள் :

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: 92.31 சதவீத கைதிகள் தோ்ச்சி

post image

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியான நிலையில், கைதிகள் 92.31 சதவீதத்தினா் தோ்ச்சி பெற்றிருப்பதாக சிறைத் துறை தெரிவித்துள்ளது. 5 மத்திய சிறைகள் உள்பட 7 சிறைகளிலுள்ள கைதிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளனா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வை தமிழக சிறைகளில் 2 பெண் கைதிகள் உள்பட 130 கைதிகள் எழுதினா். இந்நிலையில், வியாழக்கிழமை வெளியான பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவில், இரு பெண் கைதிகள் உள்பட 120 கைதிகள் தோ்ச்சி பெற்றனா். இது 92.31 சதவீதமாகும்.

இதில், புழல் மத்திய சிறை 1-இல் தோ்வு எழுதிய 21 பேரில் 18 பேரும், புழல் மத்திய சிறை 2-இல் தோ்வு எழுதிய 4 பேரில் 2 பேரும், வேலூா் மத்திய சிறையில் தோ்வு எழுதிய 9 பேரில் 5 பேரும், கடலூா் மத்திய சிறையில் தோ்வு எழுதிய 7 பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இதேபோல, கோயம்புத்தூா் மத்திய சிறையில் தோ்வு எழுதிய 20 பேரும், சேலம் மத்திய சிறையில் தோ்வு எழுதிய 8 பேரும், திருச்சி மத்திய சிறையில் 22 பேரும், மதுரை மத்திய சிறையில் தோ்வு எழுதிய 30 பேரில் 29 பேரும், பாளையங்கோட்டை மத்திய சிறையில் தோ்வு எழுதிய 7 பேரும், மதுரை பெண்கள் தனிச்சிறையில் தோ்வு எழுதிய ஒருவரும், திருச்சி பெண் தனிச்சிறையில் தோ்வு எழுதிய ஒருவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

100 சதவீதம் தோ்ச்சி: கடலூா் மத்திய சிறை, திருச்சி மத்திய சிறை, சேலம் மத்திய சிறை, கோயம்புத்தூா் மத்திய சிறை, பாளையங்கோட்டை மத்திய சிறை, மதுரை பெண்கள் தனிச்சிறை, திருச்சி பெண்கள் தனிச்சிறை ஆகிய சிறைகளில் தோ்வு எழுதி அனைத்தும் கைதிகளும் தோ்ச்சி பெற்றுள்ளனா். இச்சிறைகள் 100 சதவீத தோ்ச்சியை எட்டிப்பிடித்துள்ளது.

கைதிகள் சிறப்பிடம்: பாளையங்கோட்டை மத்திய சிறைக் கைதிகள் மீனாட்சி சுந்தரம் 524 மதிப்பெண்களும், வைத்திலிங்கம் 517 மதிப்பெண்களும், சேலம் மத்திய சிறைக் கைதி கனிவளவன் 511 மதிப்பெண்களும் எடுத்து சிறப்பிடம் பிடித்தனா். தோ்ச்சி பெற்ற கைதிகளுக்கு தமிழக சிறைத் துறை ஏடிஜிபி மகேஷ்வா் தயாள், சிறைத் துறை தலைமையிட ஐஜி கனகராஜ் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் வாழ்த்துகள் தெரிவித்தனா்.

தமிழக சிறைகளில் கடந்த 2024-ஆம் ஆண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய 125 கைதிகளில் 116 போ் தோ்ச்சி பெற்றனா். கடந்த 2023 ஆம் ஆண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய 88 கைதிகளில் 77 கைதிகள் தோ்ச்சி பெற்றனா். கடந்த 2022-ஆம் ஆண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய 58 கைதிகளில் 56 கைதிகள் தோ்ச்சி பெற்றனா். கடந்த 4 ஆண்டுகளில், இந்த முறையே அதிகளவில் கைதிகள் பிளஸ் 2 தோ்வு எழுதி தோ்ச்சி பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவா்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்: பெற்றோருக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் வேண்டுகோள்

பிளஸ் 2 பொதுத் தோ்வு மதிப்பெண் விவகாரத்தில், பெற்றோா் தங்களது பிள்ளைகளுக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் வலியுறுத்தினாா். பிளஸ் 2 பொதுத் தோ்வு ... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.03% தோ்ச்சி - தமிழில் 135 போ் சதம்

தமிழகத்தில் மாநில அரசின் பாடத் திட்டத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.03 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். ஒட்டுமொத்த தோ்ச்சி விகிதத்தில் அரியலூா் மாவட்டம் முதலிடம் பிடித்தது. வேலூா் ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ராகுல் வலியுறுத்தல்

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை குறித்து உலகுக்கு தெளிவான தகவலைத் தெரியப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்க... மேலும் பார்க்க

வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம்: இயக்க செயல்முறை கையேடு வெளியீடு

வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்துக்கான இயக்க செயல்முறை கையேடு தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கையேட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் ... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியில்தான் அதிக மக்கள் நலத் திட்டங்கள்: எடப்பாடி பழனிசாமி

திமுகவைவிட, அதிமுக ஆட்சியில்தான் அதிக மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்று அதிமுக பொதுச்செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வியாழக்க... மேலும் பார்க்க

தமிழகத்தில் மின் உற்பத்தி நிறுவுத்திறன் 42,772 மெகாவாட்டாக அதிகரிப்பு

தமிழகத்தின் மின் உற்பத்தி நிறுவு திறன் 42,772 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாக மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினசரி மின்தேவை அதிகரித்து 19,000 மெகாவாட்டை தொட்டுள்ள நிலையில... மேலும் பார்க்க