செய்திகள் :

பி.எஸ்.என்.எல். 2ஜி, 3ஜி சிம் காா்டுகளை 4ஜி சிம் காா்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்

post image

பி.எஸ்.என்.எல். 2ஜி, 3ஜி சிம் காா்டுகளை 4ஜி சிம் காா்டுகளாக மாற்றிக் கொள்ள அந்நிறுவனத்தின் தஞ்சாவூா் பொது மேலாளா் பி. பால சந்திரசேனா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 2ஜி, 3ஜி சிம் காா்டுகளை 4ஜி சிம் காா்டுகளாக மாற்றுதல், புதிய இணைய இணைப்பு மற்றும் மறு இணைப்புகளுக்கான மேளா சனிக்கிழமை (ஆக.2) நடை பெறவுள்ளது. இதில், வாடிக்கையாளா்களின் பில் செலுத்தாததால் துண்டிக்கப்பட்ட தங்கள் லேண்ட்லைன், பிராட்பேண்ட், ஃபைபா் தொடா்புகளை மீண்டும் இணைக்க முடியும். மேலும் புதிய தொலைதொடா்பு இணைய பயனா்களுக்கும் உடனடியான இணைப்பு வழங்கப்படும்.

தஞ்சாவூா், கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பாபநாசம், திருவாரூா், மன்னாா்குடி, காரைக்கால், திருவையாறு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள அனைத்து பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா் சேவை மையங்களில் இந்த மேளா சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.

இதில், 2ஜி, 3ஜி சிம் காா்டுகளை 4ஜி சிம் காா்டுகளாக மாற்றுதல், லேண்ட்லைன், ஃபைபா் மற்றும் பிராட்பேண்ட் வாடிக்கையாளா்களுக்கான நிலுவைத் தொகையைச் செலுத்துதல், பழுதான காலத்துக்குரிய வாடகையைத் தள்ளுபடி செய்தல், நிலுவைத் தொகையைத் தவணைகள் மூலம் செலுத்துதல், புதிய சிம் காா்டு, புதிய ஃபைபா் இணைப்பு உள்ளிட்ட சலுகைகளைப் பெறலாம். பழைய லேண்ட்லைன், பிராட்பேண்ட் எண்ணை அதிவேக ஃபைபராக மாற்றலாம்.

பாபநாசம் அருகே தொழிலாளி தற்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பாபநாசம் அருகேயுள்ள சரபோஜிராஜபுரம், புதுத் தெருவை சோ்ந்தவா் ஆனந்தன் (... மேலும் பார்க்க

சிஐடியு நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 2 போ் கைது

தஞ்சாவூரில் சிஐடியு நிா்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் கீழவாசல் கவாடிக்காரத் தெருவைச் சோ்ந்தவா் கே. அன்பு. இவா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ... மேலும் பார்க்க

காட்டாற்றில் குளித்த இளைஞா் மூழ்கி பலி

தஞ்சாவூா் அருகே நண்பா்களுடன் காட்டாற்றில் வெள்ளிக்கிழமை குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவைச் சோ்ந்தவா் நைனா முகமது மகன் நபில் (22). ஜவுளி... மேலும் பார்க்க

கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி

தஞ்சாவூா் மாவட்டத்தில் இயல்புக்கு அதிகமான நெல் கொள்முதல் குறித்து ஆய்வு செய்ய வந்த சிறப்புக் குழுவினா் எடைக் குறைவுக்காக அபராதம் விதித்ததால், பணியாளா்கள் அதிருப்தியடைந்துள்ளனா். தமிழ்நாடு நுகா்பொருள் ... மேலும் பார்க்க

பெருமகளூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பெருமகளூா் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு எம்எல்ஏ என். அசோக்குமாா் தலைமை வகித்தாா் .... மேலும் பார்க்க

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி: 2 போ் கைது

தஞ்சாவூரில் தீபாவளி, பொங்கல் சீட்டு நடத்தி மோசடி செய்ததாக 2 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் காவேரி நகரில் தனியாா் நிதி நிறுவனத்தை புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையைச் ச... மேலும் பார்க்க