செய்திகள் :

பீகார்: மனைவியைப் பழிவாங்கச் சாலை விதிகளை மீறிய நபர்; காரணம் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறை!

post image

மனைவியைப் பிரிந்து வாழும் கணவர், மனைவியின் வண்டியை எடுத்துக்கொண்டு வேண்டுமென்றே போக்குவரத்து விதிகளை மீறி மனைவியைத் தண்டத்தொகை செலுத்த வைத்துள்ளார்.

பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்த பெண், தான் செய்யாத குற்றத்திற்காகப் பலமுறை அபராதம் செலுத்தியுள்ளார்.

திருமணம் ஆகி ஒன்றரை மாதங்கள் ஆன இந்த ஜோடி சில கருத்து வேறுபாடு காரணமாகத் தனித்தனியாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

திருமணத்தின் போது பரிசாக வழங்கப்பட்ட பைக்கை கணவர் தர மறுத்திருக்கிறார். மேலும், மனைவி மீதான கோபத்தால் வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் போக்குவரத்து விதிகளை மீறித் தண்டத்தொகையைப் பெற்றிருக்கிறார்.

Traffic Rider

தற்போது நடைமுறையின்படி போக்குவரத்து விதிகளை மீறினால் அபராதத் தொகை இ-சலான் பைக் உரிமையாளரின் செல்போனுக்கு நேரடியாக மெசேஜ் சென்றுவிடும் என்பதால் இவ்வாறு செய்திருக்கிறார்.

அவரது மனைவியின் செல்போனுக்கு மெசேஜ் தொடர்ச்சியாக வந்துள்ளன. அவரும் எப்போதாவது தவறுதலாகப் போக்குவரத்து விதியை மீறி இருப்போம் என்று எண்ணி ஆரம்பத்தில் அபராதங்களைச் செலுத்தியிருக்கிறார். தொடர்ச்சியாக இவ்வாறு நடக்கவே இது கணவரின் செயல் எனப் புரிந்துகொண்டுள்ளார்.

இதனை அடுத்து அந்த பைக்கை திருப்பிக் கேட்டபோது அதனையும் அந்த நபர் தர மறுத்துள்ளார். இதனால் விரத்தி அடைந்த பெண், காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். வழக்கு குறித்து விசாரித்தபோது மனைவியைப் பழி வாங்க அந்த நபர் செய்ததை அறிந்து போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

"சிகிச்சையே வேண்டாம்னு திரும்பி வந்துட்டேன்" - மருத்துவமனையில் நடந்ததை விவரிக்கும் கஞ்சா கருப்பு

நடிகர் கஞ்சா கருப்பு இன்று காலை சென்னை போரூரில் உள்ள மாநகராட்சி சமுதாய நல மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்ற போது மருத்துவர்கள் பணியில் இல்லை எனக்கூறி ஆர்ப்பாட்டம் செய்த நிலையில் மாநகராட்சி மருத்... மேலும் பார்க்க

பெங்களூரு விமான கண்காட்சி: வானில் வர்ணஜாலம் நிகழ்த்திய இந்திய விமானப்படை - Photo Album

விமான படையினர் சாகச நிகழ்ச்சிகள்விமான படையினர் சாகச நிகழ்ச்சிகள்விமான படையினர் சாகச நிகழ்ச்சிகள்விமான படையினர் சாகச நிகழ்ச்சிகள்விமான படையினர் சாகச நிகழ்ச்சிகள்விமான படையினர் சாகச நிகழ்ச்சிகள்விமான பட... மேலும் பார்க்க

Kumbh Mela: குடியரசுத் தலைவர் வருகையால் திணறிய உ.பி; 300 கிமீ தூரத்திற்குப் போக்குவரத்து நெரிசல்

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் நடந்து வரும் கும்பமேளாவால் உத்தரப்பிரதேசம் திணறி வருகிறது. ஒட்டுமொத்த நிர்வாகமும் கும்பமேளா நடைபெறும் இடத்தில் பணியாற்றி வருகிறது. அப்படி இருந்தும் மெளனி அமாவாச... மேலும் பார்க்க

`அபிஷேக்-க்கு இருக்கும் உரிமை அவருக்கும் இருக்கிறது..!’ - சொத்தை பிரிப்பது பற்றி அமிதாப் சொல்வதென்ன?

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் ஒரு நேரத்தில், அதாவது 1990களின் இறுதியில் கடன் தொல்லையால் கஷ்டப்பட்டார். சொந்தமாக திரைப்படங்கள் தயாரித்து தோல்வி அடைந்தார். அதன் பிறகு கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி நடத்... மேலும் பார்க்க

Adani: 'ரூ.10 லட்சம் முதல் ரூ.10,000 கோடி வரை' - மகனின் திருமணத்தில் எடுத்த திடீர் முடிவு

ப்ரீ-வெட்டிங், கிராண்ட் வெட்டிங் என சென்ற ஆண்டு அம்பானி மகனின் திருமணத்தை உலகமே பேசித் தள்ள, இந்த ஆண்டு இந்தியாவின் இன்னொரு டாப் பணக்காரரான அதானியின் மகன் திருமணம் நேற்று முன்தினம் சத்தமே இல்லாமல் நடந... மேலும் பார்க்க