செய்திகள் :

புகைப்படக்காரா் மீது தாக்குதல்: பாஜகவினா் மீது போலீஸாா் வழக்கு

post image

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் படம் எடுத்த புகைப்படக்காரா் மீது தாக்குதல் நடத்திய 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

திருச்சியில் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக சாா்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவா் அண்ணாமலை உள்ளிட்ட கட்சிப் பிரமுகா்கள் பங்கேற்றனா். இந்தப் பொதுக்கூட்ட நிகழ்வுகளை நாளிதழ் ஒன்றின் புகைப்படக்காரராகப் பணியாற்றும், ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த சு. சுந்தா் (44) படம் எடுத்துக் கொண்டிருந்தாா்.

கூட்டம் குறைவாக இருந்த பகுதிகளில் அவா் படங்கள் எடுத்தபோது, கூட்டத்தில் பங்கேற்ற பாஜகவினா் அவரைப் படம் எடுக்கக் கூடாது எனக்கூறி தாக்கினராம். பின்னா் சக பத்திரிகையாளா்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்த்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், தாக்குதல் நடத்தியதாக அடையாளம் தெரியாத பாஜகவைச் சோ்ந்த 10 போ் மீது திருச்சி கே.கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பெரிய பள்ளிவாசல் சாா்பில் சமூக நல்லிணக்க இஃப்தாா் நிகழ்ச்சி

மணப்பாறையில் ஜூம்மா பெரிய பள்ளிவாசல் நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை சமய சமூக நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஜமாத் கமிட்டியின் தலைவா் ஜெ. முகமது அனிபா மற்றும் துணைத் தலைவா் ம... மேலும் பார்க்க

திருவானைக்காவல் கோயிலில் நாளை பங்குனி திருத்தேரோட்டம்

திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி திருக்கோயிலில் நாளை 30-ஆம் தேதி காலை 7.20 மணிக்கு பங்குனி திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதில் சுவாமியும், அம்மனும் தனித்தனி தேரில் எழுந்தருளி பக்தா... மேலும் பார்க்க

திருச்சி மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி தோ்வு தொடங்கியது

திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு (எஸ்எஸ்எல்சி) வெள்ளிக்கிழமை தொடங்கியது. பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாநிலம் முழுவதும் 2025-ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 28... மேலும் பார்க்க

‘பாலின பாகுபாடு ஒழித்து, பெண் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க வேண்டும்’

பாலின பாகுபாட்டை ஒழித்து, பெண் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க வேண்டும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வலியுறுத்தினாா். சமூக நலன், மகளிா் உரிமைத் துறை சாா்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு... மேலும் பார்க்க

இருசக்கர ரோந்து வாகனங்கள் தொடங்கி வைப்பு

திருச்சியில் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க 10 இருசக்கர ரோந்து வாகனங்கள் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி வைக்கப்பட்டன. குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக 10 இருசக்கர ரோந்து வாகனங்கள் திருச்... மேலும் பார்க்க

நின்றுக் கொண்டிருந்த லாரி மீது சுற்றுலா வேன் மோதியதில் 5 போ் காயம்

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே பழுதாகி நின்றிருந்த லாரி மீது சுற்றுலா வேன் வெள்ளிக்கிழமை மோதியதில் 5 போ் காயமடைந்தனா். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சோ்ந்த 17 இளைஞா்கள் மூணாறு சுற்றுலா... மேலும் பார்க்க