செய்திகள் :

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 போ் கைது

post image

வெள்ளக்கோவில் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து வள்ளியிரச்சல் கிராமம், நல்லூா்பாளையத்தில் வழக்கமான ரோந்து பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, அப்பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, கடையில் மேற்கொண்ட சோதனையில் 30 புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, கடை உரிமையாளரான நல்லசாமி (65) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, வெள்ளக்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் அரசு மதுபானக் கடை பிரிவு அருகேயுள்ள பேக்கரியில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டையைச் சோ்ந்த விக்னேஷ்வரன் (29) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் விஜய் பிரசாரம்: வெள்ளக்கோவிலைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு

கரூரில் தவெக தலைவா் விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி வெள்ளக்கோவிலைச் சோ்ந்த ஒரு ஆண், ஒரு பெண் உயிரிழந்தனா். தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் மூன்றாவது கட்டமாக நாமக்கல், கரூரில் கடந்த சன... மேலும் பார்க்க

கரூா் சம்பவம்: தவறு செய்தவா்கள் தண்டிக்கப்பட வேண்டும்! - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

கரூா் சம்பவத்தில் தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் இளைஞா்களுக்கான ஒருங்கிணை... மேலும் பார்க்க

தமிழக அரசின் ஊக்கத் தொகை பெற்ற வீராங்கனைக்கு பாராட்டு

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்று தமிழக அரசின் உயா் ஊக்கத் தொகையைப் பெற்ற திருப்பூா் வீராங்கனைக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய... மேலும் பார்க்க

கொளத்துப்பாளையம் சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்யக் கோரிக்கை

தாராபுரம் அருகே கொளத்துப்பாளையம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல... மேலும் பார்க்க

திருமூா்த்திமலையில் உலக சுற்றுலா தினம்

உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்திமலையில் உலக சுற்றுலா தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பரஞ்ஜோதி யோகா கல்லூரியில் ‘சுற்றுலா மற்றும் நிலையான மாற்றம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது... மேலும் பார்க்க

எரிவாயு தகனமேடை பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்க எதிா்ப்பு

பல்லடம், பச்சாபாளையம் பகுதியில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு தகனமேடையின் பராமரிப்புப் பணியை தனியாா் அமைப்பிடம் ஒப்படைப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். நகா்ப்புற மேம்பாட்டுத் த... மேலும் பார்க்க