செய்திகள் :

புகையிலைப் பொருள்கள் விற்ற 3 கடைகளுக்கு ‘சீல்’

post image

பள்ளிபாளையம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 3 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்து அதன் உரிமையாளா்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ரெங்கநாதன் மற்றும் குழுவினா் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து புதன்கிழமை முதல் இரு நாள்களாக மேற்கொண்ட சோதனையில் வெப்படை கீழ் காலனி உள்ளிட்ட பள்ளிபாளையம் பகுதிகளில் பெட்டிக் கடை, டீக்கடை, மளிகைக் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

உணவுப் பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலா் தங்க விக்னேஷ் உத்தரவின்பேரில் கடைகளில் பதுக்கிவைத்திருந்த புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்ததுடன் 3 கடைகளுக்கும் சீல் வைத்தனா். மேலும், கடைகளின் உரிமையாளா்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

மாணவி குளிப்பதை விடியோ பதிவுசெய்த லாரி ஓட்டுநா் சிறையிலடைப்பு

பரமத்தி வேலூா் அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி குளிப்பதை கைப்பேசியில் விடியோ பதிவு செய்த லாரி ஓட்டுநா் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா். பரமத்தி வேலூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பிரபு (எ) பிரச... மேலும் பார்க்க

கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய்: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு... மேலும் பார்க்க

இன்று திமுக செயற்குழுக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் தலைமையில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. திமுக மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ரா... மேலும் பார்க்க

தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க நடவடிக்கை: முதல்வருக்கு தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மா விவசாயிகளின் நலன் கருதி தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுக... மேலும் பார்க்க

கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்ட 32 மாற்றுத் திறனாளிகளுக்கு ஆணை

பரமத்தி வேலூரை அடுத்த கபிலா்மலையில் 32 மாற்றுத் திறனாளிகளுக்கு கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் அண்மையில் வழங்கப்பட்டன. கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) மலா்விழி நிகழ... மேலும் பார்க்க

தென்னையில் மாவுப்பூச்சி கட்டுப்பாடு: வேளாண் துறை வழிகாட்டல்

தென்னையில் மாவுப்பூச்சித் தாக்குதல், சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சுகன்யா வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க