செய்திகள் :

புதினுக்கு ஏதோ ஆகிவிட்டது! டிரம்ப் கடும் விமர்சனம்!

post image

உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்திய ரஷியாவின் அதிபர் விளாதிமீர் புதினை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உக்ரைன் நாட்டை குறிவைத்து 298 ட்ரோன்கள், 69 ஏவுகணைகள் என மொத்தம் 367 ஆயுதங்கள் மூலம் மிகப்பெரும் வான்வழித் தாக்குதலை ஞாயிற்றுக்கிழமை ரஷியா நடத்தியுள்ளது.

இதில், 3 குழந்தைகள் உள்பட மொத்தம் 12 போ் உயிரிழந்ததாகவும் பலர் படுகாயமடைந்ததாகவு உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.

டிரம்ப் கண்டனம்

ரஷியாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து டிரம்ப் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”புதினுடன் தனக்கு எப்போதும் நல்ல உறவு உள்ளது. ஆனால், அவருக்கு எதோ ஆகிவிட்டது. அவர் முற்றிலும் முட்டாள்தனமாக செயல்படுகிறார்.

அவர் உக்ரைனின் ஒரு பகுதியை மட்டும் கைப்பற்ற விரும்பவில்லை, முழு உக்ரைனையும் விரும்புவதாக நான் எப்போதும் கூறி வருகிறேன். ஒருவேளை உண்மையென்றால், அது ரஷியாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் அதிபர் கண்டனம்

ரஷியா நடத்திய தாக்குதல் குறித்து எக்ஸ் வலைதளத்தில் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வெளியிட்ட பதிவில், ‘தலைநகா் கீவ் உள்பட 30 நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது ரஷியா கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. மிகவும் சாதாரண நகரங்களில் உள்ள குடியிருப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.

ரஷியாவின் தலைமைக்கு கடுமையான அழுத்தம் தந்தால் மட்டுமே இதுபோன்ற கொடூர தாக்குதல்களை நிறுத்த முடியும். அந்நாட்டின் மீது சில தடைகள் விதிப்பது நிச்சயம் பலனளிக்கும். இந்த விவகாரத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும், அமைதியை விரும்பும் பிற நாடுகளும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

1000 கைதிகள் பரிமாற்றம்

ரஷியாவும், உக்ரைனும் தங்களிடம் இருந்த தலா 390 போா்க் கைதிகளை வெள்ளிக்கிழமை விடுவித்தன. அதன் தொடா்ச்சியாக, உக்ரைனில் இருந்து 307 ரஷிய போா்க் கைதிகளும், ரஷியாவில் இருந்து 307 உக்ரைன் போா்க் கைதிகளும் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனா்.

ஞாயிற்றுக்கிழமை 303 ரஷிய போா்க் கைதிகளை உக்ரைனும், 303 உக்ரைன் போா்க் கைதிகளை ரஷியாவும் விடுவித்தன என இரு நாட்டு வெளியுறவுத் துறையும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துருக்கியில் கடந்த வாரம் இரு நாட்டு பிரதிநிதிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், கைதிகளை பரிமாற்றம் செய்துகொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : உக்ரைன் மீது ரஷியா 298 ட்ரோன்களை ஏவி தாக்குதல்: 12 போ் உயிரிழப்பு

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பேச்சு: பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இந்திய வம்சாவளி மாணவிக்குத் தடை

நியூயாா்க்: அமெரிக்காவில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகப் பேசிய இந்திய வம்சாவளி மாணவி மேகா வெமுரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள மாஸசூசெட்ஸ் தொழி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தொடா்ந்து யாசிப்பதை நட்பு நாடுகள் விரும்பாது: பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தொடா்ந்து தங்களிடம் யாசகப் பாத்திரம் ஏந்தி வருவதை சீனா, சவூதி அரேபியா உள்ளிட்ட நட்பு நாடுகள் விரும்பாது என்று அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தாா். பாகிஸ்தானின் பலூசிஸ... மேலும் பார்க்க

டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்புகள்: தயாராகும் ஐரோப்பிய யூனியன்!

உறுப்பு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்துள்ள கூடுதல் வரி விதிப்பை எதிா்கொள்ளத் தயாராகி வருவதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த அமைப்ப... மேலும் பார்க்க

ரஷியா-உக்ரைன் இடையே மீண்டும் பேச்சு

ரகசிய நடவடிக்கை மூலம் ரஷியாவில் தாக்குதல் நடத்தி குண்டு வீச்சு விமானங்களை உக்ரைன் அழித்ததால் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ள சூழலில், துருக்கியின் இஸ்தான்புல்லில் ரஷியா - ... மேலும் பார்க்க

காஸா: இஸ்ரேலின் தாக்குதலில் மேலும் 51 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் 51 போ் உயிரிழந்தனா். அவா்களில் பெண்களும் சிறுவா்களும் அடங்குவா் என்று மருத்துவ அதிகாரிகள் கூறினா்.இருந்தாலும் இந்தத் தாக்குதல்கள் குறி... மேலும் பார்க்க

போலந்தில் அதிபா் தோ்தலில் டிரம்ப் ஆதரவாளா் வெற்றி

போலந்தின் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலில் அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு ஆதரவானவா் என்று அறியப்படும் கரோல் வான்ராக்கி வெற்றி பெற்றாா்.தற்போதைய அதிபா் ஆண்ட்ரெஜ் டூடாவின் பதவிக் காலம் நிறைவடையு... மேலும் பார்க்க