செய்திகள் :

`புதினுக்கு டெட்லைன்; நெதன்யாகுவுக்கு எச்சரிக்கை’ ; கோபத்தில் ட்ரம்ப் - நட்பில் விரிசலா?

post image

'இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்... அந்தப் போரை நிறுத்தினேன்... இந்தப் போரை நிறுத்தினேன்...' என்று கூறி வருகிற அமெரிக்க அதிபர் ட்ரம்பால், இன்னும் ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரை நிறுத்த முடியவில்லை.

ரஷ்யா - உக்ரைன் போர்

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த, அவர் எவ்வளவோ முட்டி மோதிப் பார்த்தும் ஒரு பலனும் இல்லை.

ரஷ்ய அதிபர் புதின் நேரடி பேச்சுவார்த்தைக்கே இன்னும் இறங்கி வரவில்லை.

ட்ரம்ப் எவ்வளவோ எச்சரித்து பார்த்தும் ஒரு பயனும் இல்லை. இப்போது அவர் கடைசி அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளார்.

அதாவது, புதின் போர் நிறுத்தத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால், ரஷ்யாவின் மீதும், ரஷ்யா உடன் வணிகம் செய்து வரும் நாடுகளின் மீதும் வரி விதிக்க உள்ளார் ட்ரம்ப்.

ட்ரம்ப் - புதின்
ட்ரம்ப் - புதின்

கடைசியாக புதினுடன் பேசிய போன்கால் குறித்து ட்ரம்ப், 'ஏமாற்றம்' என்று குறிப்பிட்டுள்ளார். 'என்னிடம் ஒன்று சொல்லிவிட்டு, அவர் இன்னொன்று செய்கிறார் என்றும் கூறியுள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த அவரும் என்னென்னவோ செய்து பார்க்கிறார்... ஆனால், புதின் ஒருப்படி கூட இறங்கி வருவதாக இல்லை.

அதனால், அவருக்கு ட்ரம்ப் ஆகஸ்ட் 8-ம் தேதியை டெட்லைனாக கொடுத்துள்ளார்.

அவர் அதற்குள் போரை நிறுத்தவில்லை என்றால், அவர் நாட்டின் மீது வரி விதிப்பு பாயும் என்று எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர்

இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாகவே பேசி வந்தார் ட்ரம்ப்.

ஆனால், தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரால், பாலஸ்தீனத்தில் இருந்து மக்கள் பசியால் வாடி வருகின்றனர். பலர் பசியால் இறந்தும் வருகிறார்கள். இந்தப் புகைப்படங்கள் உலகம் முழுக்க பரவி, எதிர்ப்புகளைக் கிளப்பி வருகின்றது.

இது ட்ரம்பிற்கும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

அதிபர் ட்ரம்ப் - பிரதமர் நெதன்யாகு
அதிபர் ட்ரம்ப் - பிரதமர் நெதன்யாகு

இது குறித்து, கடந்த வெள்ளிக்கிழமை, நெதன்யாகு உடன் போன்கால் பேசினார் ட்ரம்ப். அதுவும் ஏமாற்றம் அளிப்பதாகவே கூறியுள்ளார்.

தொடர்ந்து வரும் இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரால், ட்ரம்பின் குடியரசு கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது என்று கூறப்படுகிறது.

சீக்கிரம் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருமாறு நெதன்யாகுவை எச்சரித்துள்ளார் ட்ரம்ப்.

ட்ரம்பிற்கு கசக்கும் நட்புகள்...

தற்சமயத்தில் ட்ரம்பிற்கும், நட்பிற்கும் சரிப்பட்டு வராத காலம் போல.

காரணம், புதின் மற்றும் நெதன்யாகு இருவருமே ட்ரம்பின் உற்ற நண்பர்கள் தான்.

ஆனால், ட்ரம்பின் பேச்சை கேட்கவோ, அவரது மிரட்டலுக்கு பணியவோ புதின் மற்றும் நெதன்யாகு தயாராக இல்லை.

இந்தப் போர்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்பும் உறுதியாக இருக்கிறாராம்.

இதுவும் ட்ரம்பிற்கு நெருக்கடியாகத் தான் உள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் - மெலானியா
டொனால்ட் ட்ரம்ப் - மெலானியா

கொஞ்சம் யோசித்து பார்த்தால், ட்ரம்பின் நண்பர் இந்திய பிரதமர் மோடியும், ட்ரம்பின் வர்த்தக கண்டிஷன்களுக்கு ஒத்துவரவில்லை.

வட கொரியா கூட, தற்போது ட்ரம்பின் நட்பு வளையத்தில் அவ்வளவாக இல்லை.

ஆக, இப்போது ட்ரம்பிற்கு நட்புகளில் சறுக்கல் ஏற்பட்டு வருகிறது.

எது எப்படியோ, ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர் நின்றால், அந்த நாடுகளின் மக்களுக்கும் நல்லது... உலக நாடுகளுக்குமே நல்லது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Rahul Gandhi: "நான் ராஜா அல்ல; ராஜா என்ற கோட்பாட்டுக்கு எதிரானவன்" - ராகுல் காந்தி ஓபன் டாக்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த பிறகு தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார்.அதன்பின்னர், காங்கிரஸ் எம்.பி-யாகச் செயல்பட்டு வந்த ராகுல் காந்தி தற்போது மக்களவை எதிர்க்கட... மேலும் பார்க்க

"இறந்தவர்களை நிம்மதியாக இருக்க விடுங்கள்" - ராகுல் காந்தியின் பேச்சுக்கு அருண் ஜெட்லி மகன் பதில்

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி குறித்துப் பேசிய கருத்துக்களுக்கு அவரது மகன் கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார்.விவசாயிகள் சட்டம் அறிம... மேலும் பார்க்க

SIR: "என் பெயரில்லை; நான் எப்படிப் போட்டியிடுவது" -தேஜஸ்வி கேள்விக்கு தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?

பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், எதிர்க்கட்சிகளின் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில், ஒரே மாதத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (SIR) தே... மேலும் பார்க்க

பாலியல் குற்றவாளி பிரஜ்வல் ரேவண்ணாவுக்குச் சாகும் வரை ஆயுள் தண்டனை; சிறப்பு நீதிமன்றம் அதிரடி

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா நேற்று நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், இன்று அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது... மேலும் பார்க்க

"ஓ.பி.எஸ் வந்துகொண்டிருக்கிறார்..!" - கூட்டணி குறித்து திமுக அமைச்சர் பேச்சு!

திருச்சியில் 'நலன் காக்கும் ஸ்டாலின்' முகாமைப் பார்வையிட்ட நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுக கூட்டணிக்கு வருவதாகப் பேசியிரு... மேலும் பார்க்க

"அது நடக்கவில்லையென்றால் மோடி இன்று பிரதமரே அல்ல" - ஆதாரங்களை வெளியிடுவதாக ராகுல் உறுதி

மக்களவைத் தேர்தல் கடந்த ஆண்டு முடிந்த பிறகு நடத்தப்பட்ட மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாகத் தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்தி தொடர்ச்சியாகக் குற்றச்சாட்... மேலும் பார்க்க