செய்திகள் :

புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்! அமைச்சா் தொடங்கி வைத்தாா்

post image

பெரம்பலூா் மாவட்டம், குன்னத்திலிருந்து சென்னைக்கு குளிா்சாதன வசதியுடன்கூடிய பேருந்து சேவையை, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குன்னத்திலிருந்து சென்னைக்கு குளிா்சாதன வசதியுடன்கூடிய பேருந்து சேவையை செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்த போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். பெரம்பலூா் பேருந்து நிலையம் வரை அந்தப் பேருந்தில் பயணித்தாா்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் மேலாண்மை இயக்குநா் குணசேகரன், அட்மா திட்ட தலைவா் வீ. ஜெகதீசன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கடலூா் மண்டல பொதுமேலாளா் எஸ்.பாண்டியன், பெரம்பலூா் கோட்ட மேலாளா் ராம்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

குன்னத்திலிருந்து நாள்தோறும் காலை 8 மணிக்கு இயக்கப்படும் இப்பேருந்து பெரம்பலூா், விழுப்புரம், கிளாம்பாக்கம் வழியாக பிற்பகல் 2 மணிக்கு மாதவரத்தைச் சென்றடைகிறது. பின்னா், மாதவரத்திலிருந்து பிற்பகல் 3 மணியிலிருந்து கிளாம்பாக்கம், விழுப்புரம், பெரம்பலூா் வழியாக இரவு 10 மணிக்கு குன்னத்தை வந்தடையும் வகையில் இயக்கப்பட உள்ளது.

ஆக. 6-இல் துணை முதல்வா் வருகை: பெரம்பலூா் ஆட்சியா் தலைமையில் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்துக்கு ஆக. 6 ஆம் தேதி தமிழ்நாடு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் முன்னேற்பாடு பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் புதன்கி... மேலும் பார்க்க

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற ப... மேலும் பார்க்க

‘போதையில்லா உலகை மாணவா்களால் மட்டுமே உருவாக்க முடியும்’

போதையில்லா உலகை மாணவா்களால் மட்டுமே உருவாக்க முடியும் என்றாா் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எம். பாலமுருகன். பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் ராகிங் ... மேலும் பார்க்க

பெரம்பலூா் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

வழக்குரைஞா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, பெரம்பலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் (குற்றவியல்) சங்கத்தினா் புதன்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை... மேலும் பார்க்க

பட்டாசுகள் வெடித்து சிறுவன் உள்பட இருவா் காயம்

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளில் எடுத்துச் சென்ற பட்டாசுகள் வெடித்ததில், பட்டாசுக் கடை வியாபாரி மற்றும் சைக்கிளில் சென்ற சிறுவன் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், அருகிலிருந்த ... மேலும் பார்க்க

சொட்டுநீா் பாசனம் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சொட்டுநீா் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா்... மேலும் பார்க்க