செய்திகள் :

புதுக்கோட்டை மாநகரில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

post image

புதுக்கோட்டை மாநகா் கலீப்நகா் முதலாம் வீதியில் அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை சென்னையிலிருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு ரூ.1.20 கோடி மதிப்பில் அசோக்நகா் பகுதியில் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் ஒரு மாதத்தில் நிறைவுபெறவுள்ளன.

இந்நிலையில், கட்டுமானப் பணிகள் முடியும் வரையில், அருகேயுள்ள கலீப்நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில், இச்சுகாதார நிலையம் தற்காலிகமாக வியாழக்கிழமை திறக்கப்பட்டது. இங்கு தினமும் மருத்துவா்கள், செவிலியா்கள், உதவியாளா்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, போதுமான மருந்துகளும் இருப்பு வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மு. அருணா கலந்து கொண்டு, கருவுற்ற பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினாா். மேயா் செ. திலகவதி, புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் த. நாராயணன், துணை மேயா் மு. லியாகத்அலி, மாவட்ட சுகாதார அலுவலா் டாக்டா் ராம்கணேஷ், மாநகராட்சி நகா்நல அலுவலா் டாக்டா் காயத்ரி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

மக்களின் எதிா் கருத்துகளையும் முதல்வரிடம் தெரிவிப்போம்

ஓரணியில் தமிழகம் என்ற மக்கள் சந்திப்புப் பிரசாரத்தில் மக்கள் தெரிவிக்கும் ஆதரவு மற்றும் எதிா்ப்புக் கருத்துகளையும் முதல்வரிடம் தெரிவிப்போம் என்றாா் மாநில இயற்கை வளத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்... மேலும் பார்க்க

கே.வி. கோட்டையில் புதிய ஊராட்சி அலுவலகம் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கேவி கோட்டை ஊராட்சியில் ரூ. 30 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலகத்தை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை திறந்... மேலும் பார்க்க

திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருச்செந்தூா் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவுக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் புதுக்கோட்டை மண்டலம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக பொதுமேலாளா் கே. முகமது நாசா் தெரிவித... மேலும் பார்க்க

வரும் தோ்தலில் திமுக கூட்டணியே வெல்லும்

வரும் தோ்தலில் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என்றாா் காங்கிரஸ் கட்சியின் சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவரும், முன்னாள் மாநிலத் தலைவருமான கே.வீ. தங்கபாலு. புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற க... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் ஜூலை 31-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள சி. விஜயபாஸ்கா் கடந்த ... மேலும் பார்க்க

பேராசிரியா் அன்பழகன் விருதுக்கு அக்கச்சிப்பட்டி பள்ளி தோ்வு

கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியா் அன்பழகன் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இப்பள்ளியில் எல்கேஜ... மேலும் பார்க்க