செய்திகள் :

ரூ.65 லட்சம் லேண்ட் ரோவர் கார் ரூ.8 லட்சத்துக்கு விற்பனை! புதிய வாகன கொள்கையால்..!

post image

தில்லியில் புதியதாக அமல்படுத்தப்பட்டுள்ள வாகனக் கொள்கையால், தன்னுடைய ரூ. 65 லட்சம் மதிப்பிலான லேண்ட் ரோவர் காரை ரூ. 8 லட்சத்துக்கு விற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தில்லியில் ஏற்பட்டு அதிகளவிலான காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் 10 முதல் 15 ஆண்டுகள் மிகவும் பழைமையான வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கக் கூடாது என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவ்வாறான வாகனங்களை உடனடியாக பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், தனது அதிக விலை கொண்ட காரை கிடைத்த விலைக்கு விற்கும் முடிவை எடுத்துள்ளார் நிதின் கோயல்.

தில்லியைச் சேர்ந்த இவர் 2013 ஆம் ஆண்டு ரூ.65 லட்சத்துக்கு ஜாக்குவார் லேண்ட் ரோவர் கார் ஒன்றை வாங்கியிருந்தார். இதைத் தற்போது ரூ. 8 லட்சத்துக்கு ஹிமாச்சலைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்துவிட்டார்.

அதுமட்டுமின்றி, தன்னுடைய 10 ஆண்டுகள் பழமையான ரூ. 40 லட்சத்துக்கு வாங்கப்பட்ட மெர்சிடிஸ் சி கிளாஸ் 220 சிடிஐ ஸ்போர்ட்ஸ் லிமிடெட் எடிசன் காரையும் ரூ. 4 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார்.

பிஎஸ் 4 வாகனங்களை 2020 ஆம் ஆண்டு வரை தயாரித்துவிட்டு திடீரென தடை செய்வது எந்தவகையில் நியாயம் எனவும் நிதின் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், அவர் தற்போது ஜாக்குவார் எஃப் பேஸ் காரையும் வாங்கியிருக்கிறார்.

இவரைப் போலவே, தில்லியைச் சேர்ந்த வருண் விஜ் என்பவர் தனது ரூ.84 லட்சம் மதிப்புள்ள சொகுசு எஸ்யூவி காரான 2015 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் எம்எல்350 காரை வெறும் ரூ.2.5 லட்சத்திற்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஜூலை 1 ஆம் தேதி எரிபொருள் தடை அமலுக்கு வந்த பிறகு, 10-க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மீட்க, வாகனம் தில்லியில் இருந்து வேறு மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று பிரமாணப் பத்திரம் அளிக்க,10,000 அபராதம், வாகனத்தை பறிமுதல் செய்வதில் போக்குவரத்துத் துறையால் ஏற்படும் செலவுகளையும் வாகன உரிமையாளர் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

The Delhi government's plan to lift the fuel ban on end-of-life vehicles and make efforts to resolve issues related to the restrictions on their movement has come too late for one man, who had to sell two expensive vehicles at throwaway prices because of the policy.

நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கன்னட நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.அதன்படி, விக்டோரியா லேஅவுட்டின் குடியிருப்பு வீடு, பெங்களூருவில... மேலும் பார்க்க

கேரள முதல்வர் அமெரிக்கா பயணம்!

கேரள முதல்வர் பினராயி விஜயன், மருத்துவப் பரிசோதனைகளுக்காக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் மேற்கொண்டு வரும் மருத்துவ சிகிச்சையின் ஒரு பகுதியாகத்... மேலும் பார்க்க

பாகிஸ்தானை விட்டு வெளியேறிய மைக்ரோசாஃப்ட்!

கராச்சி: தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், பணியாளர்களைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தியின் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் உள்ள தனது வரையறுக்கப்பட்ட செயல்பாடுகளை மூடுவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பினால் நாட... மேலும் பார்க்க

அமர்நாத்: 2 நாள்களில் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் !

தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் 2 நாள்களில் 20 ஆயிரம் பக்தர்கள் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளனர்.இதுகுறித்து துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறுகையில், இதுவரை, தகவல்களின்படி... மேலும் பார்க்க

மொழியின் பெயரால் வன்முறை கூடாது! - ஃபட்னவீஸ் எச்சரிக்கை

மொழியின் பெயரால் வன்முறையில் ஈடுபடக்கூடாது என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் எச்சரித்துள்ளார். மேலும், மராத்தி மொழியின் பெருமைக்கான வன்முறையில் ஈடுபடுவதையும் பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் ஓடும் ரயிலில் இருந்து மனைவியை தள்ளிவிட்ட கணவன் !

ஜார்க்கண்டில் ஓடும் ரயிலில் இருந்து மனைவியை தள்ளிவிட்ட கணவனால் பரபரப்பு நிலவியது. ஜார்க்கண்ட் மாநிலம், பர்ககானாவிலிருந்து வாரணாசிக்கு தம்பதியினர் வாரணாசி எக்ஸ்பிரஸில் செவ்வாய்க்கிழமை கிளம்பியுள்ளனர். ... மேலும் பார்க்க