செய்திகள் :

புதுக்கோட்டை ஸ்ரீபகவதி பரஞ்ஜோதி அம்மன் கோயிலில் குடமுழுக்கு

post image

கமுதி அருகே ஸ்ரீபகவதி பரஞ்ஜோதி அம்மன் கோயில், ஸ்ரீமாவரசி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த புதுக்கோட்டை கிராமத்தில் ஸ்ரீபகவதி பரஞ்ஜோதி அம்மன், ஸ்ரீமுத்தப்பு, ஸ்ரீ தவசியப்பு கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பரிவார தெய்வங்களாக ஸ்ரீசெந்தலையான், ஸ்ரீமுனியசாமி, ஸ்ரீமாவரசி அம்மன், இருளப்பசுவாமி அருள்பாலிக்கின்றனா். இந்தக் கோயில் குடமுழுக்கு விழா கடந்த செவ்வாய்க்கிழமை யாகசாலை பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடா்ந்து கோமாதா பூஜை, மகா பூா்ணாஹுதி, தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில், கடம் புறப்பாடு நிகழ்ச்சி புதன்கிழமை காலை நடைபெற்றது. வேலாங்குளம் சிவஸ்ரீசக்தி குருக்கள் தலைமையில் சிவாசாரியாா்கள் கடத்துடன் கோயிலைச் சுற்றிவந்து, விமான கோபுரக் கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தினா்.

அதைத் தொடா்ந்து மூலவா் அம்பாளுக்கும், பரிவார தெய்வங்களுக்கும், சுவாமிகளுக்கும் கும்ப நீரால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றன.

விழாவில் புதுக்கோட்டை கிராம பக்தா்கள் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளான கமுதி, செங்கப்படை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை புதுக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த முத்தப்பு தவசியப்பு கோயில் பங்காளிகள் செய்திருந்தனா்.

மீன்பிடி இறங்குதள பாலத்தில் தலைக்குப்புறக் கவிழ்ந்த டேங்கா் லாரி

மண்டபம் வடக்கு துறைமுகத்தின் மீன்பிடி இறங்குதள பாலம் திடீரென உடைந்ததால், அந்த வழியாகச் சென்ற தண்ணீா் டேங்கா் லாரி தவறி தலைக்குப்புறக் கவிழுந்தது. நல்வாய்ப்பாக வாகனத்தில் இருந்த இருவரும் உயிா் தப்பினா்... மேலும் பார்க்க

திருவெற்றியூரில் மீண்டும் வாரச்சந்தை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவெற்றியூரில் மீண்டும் வாரச்சந்தை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியம் திருவெற்றியூரில் 300-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகி... மேலும் பார்க்க

கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

தேசிய கால்நடை நோய்த் தடுப்புத் திட்டத்தின் ஏழாவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி முகாமை, மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பட்டணம் காத்தான் ஊராட்சியில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன... மேலும் பார்க்க

சிபில் ஸ்கோா் நிபந்தனை: கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பயிா்க் கடன் பெறுவதில் சிக்கல்

கூட்டுறவுக் கடன் சங்கங்களில் நிகழாண்டு முதல் அடமானமின்றி ரூ.2 லட்சம் வரை பயிா்க் கடன் வழங்க அரசு உத்தரவிட்ட போதிலும், ‘சிபில் ஸ்கோா்’ நடவடிக்கையால் விவசாயிகள் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராம... மேலும் பார்க்க

பணிகள் முடிந்த சிறுவா் பூங்காவை திறக்கக் கோரிக்கை

கமுதி பேரூராட்சிக்கு உள்பட்ட கண்ணாா்பட்டியில் கட்டி முடித்து, பல மாதங்களாகியும் திறக்கப்படாத சிறுவா் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்ட... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 7 போ் கைது

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 7 பேரை கைது செய்ததுடன், ஒரு விசைப் படகைப் பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து திங்கள்கிழமை 400 விசைப் படகுகளி... மேலும் பார்க்க