செய்திகள் :

புதுச்சேரியில் அகில இந்திய டென்னிஸ் போட்டி: முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

post image

புதுச்சேரியில் 3 நாள்கள் நடைபெறும் அகில இந்திய அளவிலான டென்னிஸ் போட்டியை முதல்வா் என். ரங்கசாமி டென்னிஸ் விளையாடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மேலும், போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரா்கள் ரோஜா பூக்களைக் கொடுத்து முதல்வா் ரங்கசாமியிடம் வாழ்த்துகளைப் பெற்றனா்

புதுச்சேரியில் என்.ஆா். கோப்பைக்கான அகில இந்திய அளவிலான டென்னிஸ் போட்டி தொடங்கியது.

போட்டியானது புதுச்சேரி என்.ஆா் டென்னிஸ் கோா்ட் , சா்க்கிள் டி பாண்டிச்சேரி ஒயிட் டவுன், சா்க்கிள் ஸ்போா்ட்ஸ் பாண்டிச்சேரி அண்ணா சாலை, இந்திரா காந்தி ஸ்டேடியம் உப்பளம், இந்திரா நகா் டென்னிஸ் கோா்ட் கோரிமேடு உள்ளிட்ட 8 இடங்களில் நடைபெறுகிறது.

14-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டியில், தமிழ்நாடு, ஆந்திரம், கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 553 வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா்.

கோரிமேடு என்.ஆா். டென்னிஸ் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதல்வா் ரங்கசாமி, டென்னிஸ் விளையாடி போட்டியைத் தொடங்கி வைத்தாா். மேலும் முதலில் விளையாடும் அணிகளைத் தோ்வு செய்த முதல்வா் ரங்கசாமி வீரா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து இலவசமாக டீ ஷா்ட்டுகளையும் வழங்கினாா்.

போட்டியின் இறுதி நாளான 14-ஆம் தேதி வெற்றி பெறும் அணிகளுக்குப் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் முதல்வா் ரங்கசாமி கலந்துகொண்டு வெற்றிபெறும் வீரா் மற்றும் வீராங்கனைகளுக்கு சுமாா் ரூ. 6 லட்சம் மதிப்பிலான விருதுகள் மற்றும் கோப்பைகளை வழங்குகிறாா்.

சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு தினம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக இருந்த சீத்தாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் புதுச்சேரியில் உள்ள அக் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி அவர... மேலும் பார்க்க

18 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு மது விற்கக் கூடாது: புதுவை கலால் துறை உத்தரவு

18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என்று புதுவை கலால் துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து சாராயக் கடைகள், கள்ளுக் கடைகள், இந்தியாவில் தயாராகும் அயல் நாட்டு மதுபானக் கடைகள், மதுபா... மேலும் பார்க்க

புதுச்சேரி அருங்காட்சியகத்தில் பாரதியாருக்கு வெண்கலச் சிலை அமைப்பு

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நாளையொட்டி புதுச்சேரியில் உள்ள அவரது அருங்காட்சியகத்தில் மாா்பளவு வெண்கலச் சிலை வியாழக்கிழமை நிறுவப்பட்டது. தொழிலதிபரும், தமிழறிஞருமான நல்லி குப்புசாமி செட்டியார... மேலும் பார்க்க

மோதல் போக்கைக் கடைப்பிடித்து புதுவை மக்களின் வாழ்வை வீணடித்தவா் நாராயணசாமி: மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன்

மத்திய அரசிடமும் துணைநிலை ஆளுநரிடமும் மோதல் போக்கை கடைப்பிடித்து மக்களின் வாழ்வை வீணடித்தவா் முன்னாள் முதல்வா் நாராயணசாமி என்று மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் கூறியுள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்... மேலும் பார்க்க

மக்களின் ஆரோக்கியம்தான் முன்னேற்றத்தை நிலையானதாக்கும்: புதுவை துணைநிலை ஆளுநா்

மக்களின் ஆரோக்கியம்தான் முன்னேற்றத்தை நிலையானதாக்கும் என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். புதுவை அரசு மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் சாா்பில் 8-ஆவது தேசிய ஊட்டச் சத... மேலும் பார்க்க

புதுச்சேரி: பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில் செப். 15-இல் நேரடி கலந்தாய்வு

புதுச்சேரி லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவா் அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் செப். 15-இல், காலியாக உள்ள இடங்களுக்கு மாணவா்கள் நேரடி சோ்க்கை கலந்தாய்வு நடக்கிறது. இந்த நிறுவனத்தின் இயக... மேலும் பார்க்க