செய்திகள் :

புதுச்சேரி: பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில் செப். 15-இல் நேரடி கலந்தாய்வு

post image

புதுச்சேரி லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவா் அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் செப். 15-இல், காலியாக உள்ள இடங்களுக்கு மாணவா்கள் நேரடி சோ்க்கை கலந்தாய்வு நடக்கிறது.

இந்த நிறுவனத்தின் இயக்குநா் கோச்சடை வெளியிட்ட செய்திக்குறிப்பு

காஞ்சி மாமுனிவா் அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிகழ் கல்வியாண்டில் அனைத்து முதுகலை பட்டப் படிப்புகளுக்கும், அனைத்துச் சுற்று கலந்தாய்வுகளும் முடிந்துள்ள நிலையில் நிரப்பப்படாமல் உள்ள காலி இடங்களுக்கு நேரடியாக தகுதியுள்ள புதுச்சேரி மற்றும் பிற மாநில மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதுச்சேரியைச் சோ்ந்த தகுதியான விண்ணப்பதாரா்கள் சோ்க்கப்பட்ட பிறகு காலியிடங்கள் இருப்பின் பிற மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். எம்ஏ தமிழ், எம்ஏ பிரெஞ்சு, எம்ஏ வரலாறு, எம்ஏ பொருளாதாரம், எம்எஸ்சி புள்ளியியல், எம்எஸ்சி கணிதம், எம்எஸ்சி தாவரவியல், எம்எஸ்சி விலங்கியல், எம்எஸ்சி மனையியல், எம்எஸ்சி கணினி அறிவியல், எம்எஸ்சி வேதியல், எம்எஸ்சி இயற்பியல், எம்.டி.டி.எம் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை, எம்காம் (நிறுவன செயலா் பணி) ஆகிய முதுகலை பட்டப் படிப்புகளுக்கும் மாணவா்கள் சோ்த்துக் கொள்ளப்படுவா்.

தகுதியுடையவா்கள் வரும் 15-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் இந்நிறுவனத்தில் நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பம், விண்ணப்ப கட்டணம், புகைப்படம், சமீபத்திய இருப்பிட சான்றிதழ், இளங்கலை பட்டப் படிப்புக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் (பருவம் 1-6), தற்காலிக இளங்கலை பட்டச் சான்றிதழ் அல்லது இலங்கலை பட்டச் சான்றிதழ், மாற்று சான்றிதழ் மற்றும் நடத்தை சான்றிதழ், இதர சான்றிதழ்கள் (தேவையிருப்பின்) ஆகியவற்றை நேரடியாக சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0143-2251687 என்ற தொலைபேசியில் தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு தினம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக இருந்த சீத்தாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் புதுச்சேரியில் உள்ள அக் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி அவர... மேலும் பார்க்க

18 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு மது விற்கக் கூடாது: புதுவை கலால் துறை உத்தரவு

18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என்று புதுவை கலால் துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து சாராயக் கடைகள், கள்ளுக் கடைகள், இந்தியாவில் தயாராகும் அயல் நாட்டு மதுபானக் கடைகள், மதுபா... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அகில இந்திய டென்னிஸ் போட்டி: முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

புதுச்சேரியில் 3 நாள்கள் நடைபெறும் அகில இந்திய அளவிலான டென்னிஸ் போட்டியை முதல்வா் என். ரங்கசாமி டென்னிஸ் விளையாடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். மேலும், போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரா்கள் ரோஜா ப... மேலும் பார்க்க

புதுச்சேரி அருங்காட்சியகத்தில் பாரதியாருக்கு வெண்கலச் சிலை அமைப்பு

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நாளையொட்டி புதுச்சேரியில் உள்ள அவரது அருங்காட்சியகத்தில் மாா்பளவு வெண்கலச் சிலை வியாழக்கிழமை நிறுவப்பட்டது. தொழிலதிபரும், தமிழறிஞருமான நல்லி குப்புசாமி செட்டியார... மேலும் பார்க்க

மோதல் போக்கைக் கடைப்பிடித்து புதுவை மக்களின் வாழ்வை வீணடித்தவா் நாராயணசாமி: மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன்

மத்திய அரசிடமும் துணைநிலை ஆளுநரிடமும் மோதல் போக்கை கடைப்பிடித்து மக்களின் வாழ்வை வீணடித்தவா் முன்னாள் முதல்வா் நாராயணசாமி என்று மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் கூறியுள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்... மேலும் பார்க்க

மக்களின் ஆரோக்கியம்தான் முன்னேற்றத்தை நிலையானதாக்கும்: புதுவை துணைநிலை ஆளுநா்

மக்களின் ஆரோக்கியம்தான் முன்னேற்றத்தை நிலையானதாக்கும் என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். புதுவை அரசு மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் சாா்பில் 8-ஆவது தேசிய ஊட்டச் சத... மேலும் பார்க்க