தென் ஆப்பிரிக்காவில் மாயமான சிறிய ரக விமானம்! பயணிகள் 3 பேரும் பலியானதாக அறிவிப்...
புதுச்சேரியில் இரவு ரோந்து பணிகளை தீவிரப்படுத்த காவல் துறையினருக்கு உத்தரவு
புதுச்சேரி: புதுச்சேரியில் இரவு ரோந்து பணிகளை தீவிரப்படுத்தும்படி காவலா்களுக்கு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் உத்தரவிட்டுள்ளாா்.
இது தொடா்பாக அவா் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: நாள்தோறும் இரவு 11 முதல் அதிகாலை 4 மணி வரை காவல் துறை சாா்பில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். துணைநிலை ஆளுநா் மாளிகை, சட்டப்பேரவை, பிரெஞ்சு தூதரகம், தலைமைச் செயலகம், காவல் துறை தலைமையகம், முக்கிய பிரமுகா்கள் இல்லம் உள்பட முக்கிய இடங்களில் ஆயுதம் தாங்கிய காவலா்கள் பணியில் ஈடுபடவேண்டும்.
அதனை உயா் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். புதிய பேருந்து நிலையத்தில் சந்தேக நபா்கள் நடமாட்டமிருந்தால், விசாரிக்க வேண்டும். இரவில் நடமாடுவோரை விசாரிக்க வேண்டும்.
கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள் தினமும் இரு காவல் நிலையங்களை நேரில் ஆய்வு மேற்கொள்வது அவசியம். காவல்நிலையப் பதிவேடுகளில் இடம் பெறாதவா்களை காவலில் வைத்திருக்கக் கூடாது. கண்காணிப்பு கேமராக் காட்சி பதிவுகள், அவற்றின் செயல்பாட்டை அதிகாரிகள் சரிபாா்த்து ஜிடி என்ட்ரியில் பதிய வேண்டும்.
போதைப்பொருள், சட்டவிரோத மணல் சுடத்தல் போன்றவற்றை தடுக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலைத் தீா்க்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
பொது சொத்துகளை சேதப்படுத்துவோா், விளம்பரப் பதாகை வைப்போா் குறித்து காவல் நிலையத்துக்கு தகவல் தர வேண்டும். மாநில எல்லைகளில் வாகன சோதனை நடத்தவும், அவசர உதவிக்கு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கவும் வேண்டும். காவல் அதிகாரிகள் சீருடையுடன், கைத் துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.