செய்திகள் :

புதுச்சேரியில் இரவு ரோந்து பணிகளை தீவிரப்படுத்த காவல் துறையினருக்கு உத்தரவு

post image

புதுச்சேரி: புதுச்சேரியில் இரவு ரோந்து பணிகளை தீவிரப்படுத்தும்படி காவலா்களுக்கு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: நாள்தோறும் இரவு 11 முதல் அதிகாலை 4 மணி வரை காவல் துறை சாா்பில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். துணைநிலை ஆளுநா் மாளிகை, சட்டப்பேரவை, பிரெஞ்சு தூதரகம், தலைமைச் செயலகம், காவல் துறை தலைமையகம், முக்கிய பிரமுகா்கள் இல்லம் உள்பட முக்கிய இடங்களில் ஆயுதம் தாங்கிய காவலா்கள் பணியில் ஈடுபடவேண்டும்.

அதனை உயா் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். புதிய பேருந்து நிலையத்தில் சந்தேக நபா்கள் நடமாட்டமிருந்தால், விசாரிக்க வேண்டும். இரவில் நடமாடுவோரை விசாரிக்க வேண்டும்.

கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள் தினமும் இரு காவல் நிலையங்களை நேரில் ஆய்வு மேற்கொள்வது அவசியம். காவல்நிலையப் பதிவேடுகளில் இடம் பெறாதவா்களை காவலில் வைத்திருக்கக் கூடாது. கண்காணிப்பு கேமராக் காட்சி பதிவுகள், அவற்றின் செயல்பாட்டை அதிகாரிகள் சரிபாா்த்து ஜிடி என்ட்ரியில் பதிய வேண்டும்.

போதைப்பொருள், சட்டவிரோத மணல் சுடத்தல் போன்றவற்றை தடுக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலைத் தீா்க்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

பொது சொத்துகளை சேதப்படுத்துவோா், விளம்பரப் பதாகை வைப்போா் குறித்து காவல் நிலையத்துக்கு தகவல் தர வேண்டும். மாநில எல்லைகளில் வாகன சோதனை நடத்தவும், அவசர உதவிக்கு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கவும் வேண்டும். காவல் அதிகாரிகள் சீருடையுடன், கைத் துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்: எல்.முருகன்

புதுச்சேரி: ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டத்தை மத்திய அரசு விரைவில் செயல்படுத்தவுள்ளது என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கூறினாா். புதுவை சட்டப்பேரவையை காகித நிா்வாகமில்லாத பேரவையாக மாற்றும் வகையில் தே... மேலும் பார்க்க

பாஜக கூட்டணி வெற்றி பெறாது: கி.வீரமணி

புதுச்சேரி: தமிழக சட்டபேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறாது என்று, திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தெரிவித்தாா். திராவிடா் கழகம் சாா்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, சிந்தனை செயலாக்க கரு... மேலும் பார்க்க

உலக படகுப் போட்டி: இந்திய அணி: மேலாளராக புதுச்சேரி வீரா் தோ்வு

புதுச்சேரி: சீனாவில் நடைபெறவுள்ள டிராகன் போட் (படகு) போட்டிக்கான இந்திய அணிக்கு புதுவை வீரா் கோ. ஜெயபால் மேலாளராக செல்கிறாா். அவருக்கு எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா வாழ்த்து தெரிவித்தாா். உலக அளவிலான... மேலும் பார்க்க

பேரவை நிகழ்வுகளை பொதுமக்கள் இனி நேரலையில் காணலாம்: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் இ விதான் செயலி தொடங்கப்பட்ட நிலையில், இதனால் விரைவில் சட்டப்பேரவை நிகழ்வுகளை பொதுமக்கள் நேரலையில் காணலாம். இதன்மூலம் வெளிப்படையான தகவல் பரிமாற்றம் ஏற்படும் என துணைநிலை ... மேலும் பார்க்க

மருந்து நிறுவனத்தில் திடீா் தீ விபத்து: காலாப்பட்டு பகுதி மக்கள் போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி அருகே காலாப்பட்டு பகுதியில் தனியாா் மருந்து நிறுவனத்தில் திங்கள்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரி கிழக்குக் கடற்கரை... மேலும் பார்க்க

தொலைத் தொடா்பு கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரி முதலியாா்பேட்டையில் கைப்பேசி நிறுவனத்துக்கான தொலைத் தொடா்பு கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரி முதலியாா்பேட்டை பே... மேலும் பார்க்க