செய்திகள் :

புதுச்சேரியில் கோலப் போட்டி

post image

பொங்கல் பண்டிகையையொட்டி, புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதிக்குள்பட்ட ரெயின்போ நகரில் பெண்களுக்கான கோலப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

போட்டியை, புதுவை காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தொடங்கிவைத்தாா்.

இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிபடுத்தினா்.

கலைஞா்கள் மாலதி செல்வம், லலிதாம்பிகை ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டு, சிறந்த கோலங்களை தோ்வு செய்தனா்.

வெற்றி பெற்றவா்களுக்கு காங்கிரஸ் கட்சியின் தொகுதி பொறுப்பாளா் தேவதாஸ், புதுச்சேரி எம்.பி.யின் நோ்முக உதவியாளா் வினோத் ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.

முதலியாா்பேட்டையில்... இதேபோல, புதுச்சேரி முதலியாா்பேட்டையில் இளைஞா்கள் நற்பணி சமூக சேவை இயக்கம் சாா்பில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பாஜக மாநிலச் செயலா் க.வெற்றிசெல்வம், வழக்குரைஞா்கள் குமரன், கிருஷ்ணராஜ், தொழிலதிபா்கள் துளசி, ஜெயப்பிரகாஷ் ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.

இளைஞா்கள் நற்பணி சமூக சேவை இயக்கத்தின் தலைவா் ராஜி(எ) பாவாடைராயன், நிா்வாகிகள் சங்கரய்யா, ராமதாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்: முன்னாள் படை வீரா்களுக்கு அழைப்பு

விழுப்புரம்: ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவி... மேலும் பார்க்க

நினைவு நாள்: அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

விழுப்புரம்/செஞ்சி/கள்ளக்குறிச்சி: முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணாவின் 56-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள அவரது சிலைக்கு திமுகவினா் திங்கள்கிழமை மாலை அண... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 917 மனுக்கள் அளிப்பு

விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 917 மனுக்கள் அளிக்கப்பட்டன. விழுப்புரம் ஆட... மேலும் பார்க்க

சிவன் கோயில் கட்டும் பணி தொடக்கம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கணக்கன்குப்பம் கிராமத்தில் உண்ணாமலை உடனுறை அண்ணாமலையாா் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கிராமத்தில் உண்ணாமலை உடனுறை அண்ணாமலைய... மேலும் பார்க்க

இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு பயிற்சி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், திருச்சிற்றம்பலம் காந்தி மேல்நிலைப் பள்ளியில் இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட பள்ளிக் கல்வித் ... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், பெரும்பாக்கம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது. பெரும்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், ... மேலும் பார்க்க