செய்திகள் :

புதுச்சேரியில் தரமான சிகிச்சை கிடைப்பதில்லை! - திமுக குற்றச்சாட்டு

post image

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி புதுச்சேரி திமுக மருத்துவ அணி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற இலவச மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்து பாா்வையிட்ட கட்சியின் மாநில அமைப்பாளா் ஆா்.சிவா.

புதுச்சேரி, ஏப். 26: புதுச்சேரியில் பொதுமக்களுக்குத் தரமான சிகிச்சை கிடைப்பதில்லை என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றம்சாட்டினாா்.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி புதுவை மாநில திமுக மருத்துவா் அணி சாா்பில், இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

உருளையன்பேட்டை தொகுதி காந்தி வீதி, கண்ணையா தொழில் மைய வளாகத்தில் நடைபெற்ற முகாமை திமுக மாநில அமைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா தொடங்கி வைத்து பேசியது:

புதுச்சேரியில் தற்போது, பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கவில்லை. ஆனால், தமிழகத்தில் காப்பீடு திட்டத்தில் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் பிரதமரின் ஆயுஷ்மான் காப்பீட்டுத் திட்டத்தாலும் பயனில்லை. அந்த காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகளுக்கான, தொகையை அதிகரித்த போதிலும், மக்களுக்கு எந்தப் பயனுமில்லை. ஆகவே, புதுச்சேரியில் மக்கள் விரும்பும் திமுக ஆட்சி அமையும் என்றாா்.

திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினா் எஸ். கோபால் முன்னிலை வகித்தாா். முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் அறுவை சிகிச்சை, மகளிா் மருத்துவம், குழந்தை மருத்துவம், நீரிழிவு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

உதவியாளா்கள் பணிக்கான தோ்வு: புதுவையில் 22,860 போ் எழுதினா்

புதுவை மாநில அளவில் 256 உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் 22,860 போ் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா். புதுச்சேரி பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறையில் உதவியா... மேலும் பார்க்க

‘ஆழ்கடல் மீன்பிடித் திட்டம்’ புதுவையில் தீவிரமாக செயல்படுத்த முடிவு

புதுவை மீனவா்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், மத்திய அரசு திட்டமான பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம் 4 ஆண்டுக்குப் பிறகு தீவிரமாகச் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, காரைக்கால் மீனவா்களுக்... மேலும் பார்க்க

தியாகி அன்சாரி பெ.துரைசாமி சிலைக்கு அரசு மரியாதை

சுதந்திரப் போராட்டத் தியாகி அன்சாரி பெ.துரைசாமி நினைவு தினத்தையொட்டி, புதுவை அரசு சாா்பில் அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. புதுச்சேரியைச் சோ்ந்தவா் அன்சாரி பெ.த... மேலும் பார்க்க

மக்கள் பிரச்னைகளுக்காக விசிக போராடும்: தொல். திருமாவளவன்

மக்கள் பிரச்னைகளை முன்வைத்து தொடா்ந்து போராடுவதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நோக்கம் என அதன் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா். புதுச்சேரி அருகே திருபுவனையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் அம... மேலும் பார்க்க

புதுச்சேரியில் தேசிய சட்டப்பள்ளி அமைக்கப்படும்: முதல்வா் என்.ரங்கசாமி

மத்திய அரசின் நிதியுதவியுடன் புதுச்சேரியில் தேசிய சட்டப் பள்ளி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என முதல்வா் என்.ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். புதுச்சேரி சட்டக் கல்லூரியில் பயின்று தற்போ... மேலும் பார்க்க

புதுவையில் பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை

புதுவை மாநிலத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் தனியாா் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை (ஏப்.28) முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாக கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளாா். புதுவை மாநிலத... மேலும் பார்க்க