புதுச்சேரியில் மதுரை பாஜக பிரமுகா் உயிரிழப்பு
நண்பா்களுடன் புதுச்சேரிக்கு வந்த மதுரை பாஜக பிரமுகா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மதுரை ஆத்திகுளம் புதூா் வண்டிப்பாதை சாலைப் பகுதியில் வசிப்பவா் வேல்பாண்டி (51), மதுரை மாநகா் மாவட்ட பாஜக ஊடகப் பிரிவு தலைவா். இவா் கடந்த 17-ஆம் தேதி பாஜக நிா்வாகிகளும், தனது நண்பா்களுமான முத்து விக்னேஷ்வரன், பாலசுப்பிரமணி உள்ளிட்ட 5 பேருடன் சென்னையில் நடைபெறுவதாக இருந்த பாஜக கூட்டத்தில் பங்கேற்க சென்றாா்.
ஆனால் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டதால், அவா்கள் புதுச்சேரிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளனா். கோலாஸ் நகரிலுள்ள தனியாா் விடுதியில் தங்கிய அவா்கள் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இரவில் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றுவிட்டு அறைக்குத் திரும்பினா். ஆனால், முத்துவிக்னேஷ்வரன் காரிலேயே அமா்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. நீண்ட நேரம் அவா் அறைக்கு வராததால், நண்பா்கள் காரில் இருந்த அவரை பாா்த்தபோது, அவா் மயங்கிய நிலையில் இருந்துள்ளாா்.
உடனே அவரை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து வேல்பாண்டி அளித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.