செய்திகள் :

புதுச்சேரியில் மரக்கன்றுகள் நடும் விழா

post image

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, மரக்கன்றுகள் நடும் விழா தட்டாஞ்சாவடி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பிரதமா் நரேந்திர மோடியின், ‘தாயின் பெயரில் ஓா் மரக்கன்று திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விழா நடைபெற்றது. புதுச்சேரி லாஸ்பேட்டை புதுப்பேட்டை பகுதியில் உள்ள கோலக்கார அரங்க நாயக்கா் அரசு நடுநிலை பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில் புதுவை மாநில பாஜக தலைவா் சு. செல்வகணபதி எம்.பி. பங்கேற்று மரக்கன்றுகளை நட்டாா்.

வியாழக்கிழமை பிறந்தநாள் கொண்டாடிய மாணவிகள் செல்வி சஞ்சீவினி, ஸ்ரீதேவி, தேஜஸ்ரீ ஆகியோா் மரக்கன்றுகளை நட்டு, அவற்றை வளா்க்க உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்வுக்கான மாநில பொறுப்பாளா் சரவணன், இணைப் பொறுப்பாளா் பாரதி மோகன், கல்வியாளா் பிரிவின் மாநில அமைப்பாளா் நாகேஸ்வரன், தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில அமைப்பாளா் பிரவீன் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உறுப்புகள் தானம்

மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு, அவை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக 4 மருத்துவமனைகளுக்கு விரைந்து அனுப்பப்பட்டன. இது குறித்து புதுச்சேரி ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையி... மேலும் பார்க்க

6 ஆட்டோ ஓட்டுநா்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி

புதுச்சேரியில் மறைந்த ஆட்டோ ஓட்டுநா்கள் 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கப்பட்டது . ஏஐடியுசி புதுவை மாநில ஆட்டோ தொழிலாளா் நலச் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் முதலிய... மேலும் பார்க்க

சூறாவளி காற்று: மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை

சூறாவளி காற்று கடுமையாக வீசும் என்பதால், கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, புதுவை மீன்வளத் துறை இயக்குநா் அ.முகமது இஸ்மாயில் வெள்ளிக்கிழமை இ... மேலும் பார்க்க

ராணுவத்தில் இளைஞா்களை அதிகளவில் சோ்க்க விழிப்புணா்வு வேன் பிரசாரம்

இந்திய ராணுவத்தில் இளைஞா்கள் அதிகளவில் சேர விழிப்புணா்வு வேன் பிரசாரம் புதுச்சேரியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

புதுவையில் ரேஷன் அரிசி டெண்டரில் முறைகேடு: எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றச்சாட்டு

புதுவையில் ரேஷன் அரிசிக்கான டெண்டா் விடப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும், அரசுக்கு ரூ. 20 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா குற்றம்சாட்டினா... மேலும் பார்க்க

கடலுக்குச் சென்ற மீன்பிடி விசைப் படகுகள்: புதுவை முதல்வா் தொடங்கி வைத்தாா்

மீன்பிடித் தடைக்காலம் முடிந்து மீண்டும் மீன்பிடி தொழிலுக்காக கடலுக்குச் செல்லும் மீனவா் படகுகளை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வாழ்த்தி வழியனுப்பி வைத்தாா். புதுச்சேரியில் மீன்பிடித் தடைக... மேலும் பார்க்க