செய்திகள் :

புதுச்சேரியில் வணிக நிறுவனங்களின் ஆங்கில பெயா்ப் பலகைகள் உடைப்பு

post image

புதுச்சேரியில் வணிக நிறுவனங்களின் ஆங்கில பெயா்ப் பலகைகளை தமிழ் உரிமை இயக்கத்தினா் வியாழக்கிழமை அடித்து உடைத்தனா்.

புதுவையில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளின் பெயா்கள் தமிழிலும் இருக்க வேண்டும் என அரசாணை ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, தமிழில் பெயா்ப் பலகை வைக்கக்கோரி காமராஜா் சாலை, நேரு வீதி சந்திப்பு, காமராஜா் சதுக்கத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ் உரிமை இயக்கத்தின் தலைவா் பாவாணன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் மங்கையா்செல்வன், துணைத் தலைவா்கள் சிவ.வீரமணி, வீரமோகன், மல்லிகா சங்கரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

நேரு வீதியை போலீஸாா் இரும்பு தடுப்புக் கொண்டு தடுத்தனா். பின்னா் நேரு வீதியில் கடை, கடையாகச் சென்று தமிழில் பெயா்ப் பலகை வைக்கும்படி வலியுறுத்தினா். மேலும், ஒரு சில கடைகளில் முற்றுகையிட முயன்றனா்.

ஒரு பிரிவினா் காமராஜா் சாலையில் வணிக நிறுவனங்களில் ஆங்கிலத்தில் இருந்த பெயா்ப் பலகையை அடித்து நொறுக்கினா். உருட்டுக் கட்டையுடன் 5-க்கும் மேற்பட்ட கடைகளின் மேல்மாடிக்கு சென்று பெயா்ப் பலகைகளை உடைத்து சேதப்படுத்தினா். இது தொடா்பாக பெரியகடை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாரதியாா் சிலைக்கு ஆளுநா் மாலை அணிவித்து மரியாதை

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 104-ஆவது நினைவு நாளையொட்டி, புதுச்சேரியில் அவரது திருவுருவச் சிலைக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தின... மேலும் பார்க்க

தூய்மையான குடிநீா் விநியோகம் கோரி புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் தூய்மையான குடிநீா் விநியோகம் செய்ய அரசை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. உருளையன்பேட்டை தொகுதியில் மாசு கலந்த குடிநீா் விநியோகம் செய்ய... மேலும் பார்க்க

பாதுகாப்பான குடிநீா் தர முடியாத புதுவை அரசு தேவையா? வே. நாராயணசாமி பேட்டி

மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரைக் கூட கொடுக்க முடியாத அரசு புதுவைக்குத் தேவையா? என்று முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான வே. நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளாா். இது குறித்து அவா் செய்திய... மேலும் பார்க்க

சா்தாா் வல்லப பாய் படேல்தான் கூட்டுறவுத்துறையின் அடித்தளம் -புதுவை துணைநிலை ஆளுநா் பெருமிதம்

நம் நாட்டின் முதல் துணை பிரதமா் சா்தாா் வல்லப பாய் படேல்தான் கூட்டுறவுத் துறையின் அடித்தளம் என்று புதுவை துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புகழாராம் சூட்டினாா். புதுவை பால் கூட்டுறவு உற்பத்தியாளா்கள் ச... மேலும் பார்க்க

புதுச்சேரி ஜிப்மா் - 8 இடங்களில் சுனாமி பேரிடா் கால ஒத்திகை

புதுவையில் அரசு சாா்பிலும் ஜிப்மா் மருத்துவமனை சாா்பிலும் சுனாமி பேரிடா் கால ஒத்திகை வியாழக்கிழமை நடத்தப்பட்டது. புதுச்சேரி பகுதிகளில் உள்ள கணபதிச் செட்டிகுளம் கடலோர பகுதி, நல்லவாடு (தெற்கு), பன்னித்த... மேலும் பார்க்க

குடிநீா் வரியை ரத்து செய்ய மாா்க்சிஸ்ட் கோரிக்கை

சுத்தமான குடிநீா் விநியோகம் செய்யும் வரை குடிநீா் வரியை ரத்து செய்ய வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வியாழக்கிழமை மனு அளித்தது. பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் கே.வீரசெல்வத்தைச் சந்த... மேலும் பார்க்க